News August 27, 2024

தேவையூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற திருத்தேர் திருவிழா

image

பெரம்பலூர் அருகே தேவையூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற மகாமாரியம்மன் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் ஆக 9ஆம் தேதி பூச்சொரிதலோடு தேர்திருவிழா தொடங்கி, கடந்த 15ஆம் தேதி காப்புக்கட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி ஊர்வலம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் ஊர்வலம் ஊர் பொதுமக்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர்.

Similar News

News November 14, 2025

பெரம்பலூர்: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

image

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 14, 2025

பெரம்பலூர்: போலி மருத்துவர் கைது!

image

பென்னக்கோணத்தை சேர்ந்த கதிர்வேல் (33) என்பவர் தனது வீட்டின் அருகே, மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்பதாக சுகாதாரத்துறை இணை இயக்கு மாரிமுத்துக்கு வந்த தகவலின் படி அவர் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது கதிர்வேல் மெடிக்கல் நடத்தி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மங்களமேடு போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 14, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 40 வயதிற்குட்பட்ட, அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தில் தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!