News September 14, 2024

தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இன்று(செப்.14) நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் தொகுதி-II A) தேர்வினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News November 22, 2025

சிவகங்கை: ரேஷன் கடை பிரச்சனைக்கு இதோ தீர்வு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் செய்து <<>>Grievance Redressal, சிவகங்கை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News November 22, 2025

சிவகங்கை: கோச்சடைய மாறன் கல்வெட்டு கண்டெடுப்பு.!

image

காரைக்குடி அருகே, கீரணிப்பட்டி கிராமத்தில் கிபி 9ம் நூற்றாண்டு கோச்சடைய மாறனின் கல்வெட்டு கொண்டெடுக்கப்பட்டது. இப்பகுதியில் நேற்று ஆய்வு செய்த காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா மற்றும் குழுவினர் கீரணிப்பட்டி கண்மாய் பகுதியில் ஒரு கல்லில் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை கண்டெடுத்து மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

News November 22, 2025

சிவகங்கை: இலவச ஆதார்; யூஸ் பண்ணிக்கோங்க!

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டத்தில் 12 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு காரைக்குடி, அழகப்பாபுரம், செக்காலை, கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், மானகிரி, தேவகோட்டை, ராம்நகர், நெற்குப்பை, உலகம்பட்டி, சிங்கம்புணரி ஆகிய அஞ்சல அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என காரைக்குடி கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!