News March 3, 2025

தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 217 பள்ளிகளில் 86 மையங்களில் 100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் 21,191 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இது தொடர்பாக திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் தேர்வு மையங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். காட்சிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பங்கேற்றார். 

Similar News

News December 6, 2025

திண்டுக்கல் காவல்துறையின் மழைக்கால பாதுகாப்பு அறிவுரை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையதளம் மூலம் இன்று வெளியிட்ட விழிப்புணர்வு அறிவிப்பில், ஏரி, குளம், கால்வாய்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

News December 6, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை வாங்கிக் தருவதாக கூறி பணம் பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதால், எந்த நபரின் போலியான வாக்குறுதியை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனே 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

News December 6, 2025

நத்தத்தில் தட்டி தூக்கிய அமைச்சர்!

image

நத்தம் சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் பல்வேறு மாற்று கட்சியினர் தங்கள் கட்சிகளை விட்டு விலகி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் R.சக்கரபாணி தலைமையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், ஒன்றிய செயலாளர்கள் சேக்சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி, ரத்தினக்குமார், தொகுதி பார்வையாளர் ரஞ்சன்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!