News April 9, 2025
தேர்வு கேள்வித்தாள் திருட்டு.. என்ன தண்டனை தெரியுமா?

மாணவர்களின் கல்வித் திறனை அறியவே பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்க அரசு பிஎன்எஸ் சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. அந்த சட்டத்தின் 4-வது பிரிவில் கேள்வித்தாள் திருட்டு மற்றும் அதை விற்பனை செய்வோருக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 1 ஆண்டு, அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News December 18, 2025
BREAKING: தவெகவில் இணைகிறார்கள்.. விஜய்

செங்கோட்டையனை தொடர்ந்து மேலும் பலர் தவெகவில் இணைய உள்ளனர் என்று விஜய் வெளிப்படையாக அறிவித்துள்ளார். மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு தவெகவில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணையவுள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், அதனை விஜய்யும் தற்போது உறுதி செய்துள்ளார்.
News December 18, 2025
டெல்லியை குளிர்விக்க EPS ஒத்து ஊதுகிறார்: CM

MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை கைவிடக் கோரி, ‘பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்’ EPS அழுத்தம் கொடுத்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களை காக்க குரல் கொடுக்க சொன்னால், டெல்லியை குளிர்விக்க EPS அறிக்கை விட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். 125 வேலைநாள்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப்போகிறது என அனைவரும் சுட்டிக்காட்டியும் அதை அறியாத அப்பாவியா அவர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 18, 2025
சுற்றியுள்ளவர்கள் துரோகம் செய்வது நன்றாய் தெரியும்..

இயக்குநர் செல்வராகவன் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில்தான், தனது X தள பதிவில், அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் துரோகம் செய்வது நன்றாய் தெரியும் என செல்வராகவன் பதிவிட்டுள்ளார். மேலும், பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து குறித்துதான் மறைமுகமாக சொல்கிறாரா என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


