News April 9, 2025

தேர்வு கேள்வித்தாள் திருட்டு.. என்ன தண்டனை தெரியுமா?

image

மாணவர்களின் கல்வித் திறனை அறியவே பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை அளிக்க அரசு பிஎன்எஸ் சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. அந்த சட்டத்தின் 4-வது பிரிவில் கேள்வித்தாள் திருட்டு மற்றும் அதை விற்பனை செய்வோருக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 1 ஆண்டு, அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News December 15, 2025

திருவள்ளூர்: சத்துணவு மையங்களில் வேலை! APPLY

image

மாவட்ட அரசுப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்து வருகை புரியாததால் பணி வேண்டாம் எனத் தெரிவித்த சத்துணவு மையங்களில், மீண்டும் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. பூவிருந்தவல்லி ஊராட்சியில் 7, வில்லிவாக்கத்தில் 3, கடம்பத்தூரில் 1 ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பதிவிறக்க இங்கே கிளிக் பண்ணுங்க!

News December 15, 2025

பெரியாரை அவமானப்படுத்திய திமுக: நாஞ்சில் சம்பத்

image

திமுகவில் கூடும் இளைஞர்களின் கூட்டம் ₹1000-க்காக வந்தவர்கள் என்று நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். தவெகவில் இருக்கும் இளைஞர்கள் விஜய்க்காக உயிரை தர தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உதயநிதியை இளம்பெரியார் என திமுகவினர் கூறியதன் மூலம், பெரியாரை அவர்கள் அவமானப்படுத்தியுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருக்கும் பாதிபேர் தவெகவுக்கு வந்துவிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

News December 15, 2025

கட்சியை தொடங்கியதும் மாற்றினார் ஓபிஎஸ்

image

‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ள OPS, கட்சியின் முகவரியையும் வழிச்சாலையில் இருந்து நந்தனத்துக்கு மாற்றிவிட்டார். இந்நிலையில், இன்று தமிழகம் வரும் அமித்ஷாவை சந்தித்து, NDA கூட்டணியில் இணைவதை உறுதி செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் அவரின் கட்சிக்கு கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!