News March 29, 2024
தேர்தல் விதி மீறல்கள் குறித்த புகார்கள் அளிக்க செயலி

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (மார்ச்.29) அவருடைய எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்தல் நடத்தை விதி (MCC) மீறல்கள் தொடர்பான புகார்களை, பொதுமக்கள் “civil investigator” செயலி (App) மூலம் அல்லது தேர்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா 18004251215 என்ற தொலைபேசி எண் மூலம் பதிவு செய்யலாம். புகார்கள் உடனடியாக பறக்கும் படை குழுக்கள் மூலம் விசாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Similar News
News December 16, 2025
கோவையில் மதுவிற்பனை செய்த இரண்டு பேர் கைது!

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் என்று வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுவிற்பனை ஈடுபட்ட மனோகரன் (52) மற்றும் தமிழ்செல்வம் (35) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 53 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News December 15, 2025
கோவை இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (15.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
கோவையில் மதுவால் வந்த வினை: பறிபோன உயிர்!

கோவை சூலூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம், மது அருந்தும் பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது நேற்று காலை கணபதி எப்சி ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே, அளவுக்கு அதிகமான மது அருந்திவிட்டு, மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


