News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 16, 2025

திருப்பூரில் வட மாநில வாலிபர்கள் கைது

image

திருப்பூர் வடக்கு காவல்நிலையை எல்லைக்கட்பட்ட கள்ளம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது‌. சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு சோதனை செய்த போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரோஸ், சுசில் குமார் முக்கியா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து சீட்டு கட்டு மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

News September 15, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 15.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

News September 15, 2025

திருப்பூர்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை செப்.16:உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் விபரம் :-குண்டடம் -பழனி ஆண்டவர் பாதயாத்திரை குழுமண்டபம், ஊதியூர்
காங்கயம்-மாரியம்மன் கோவில் மண்டபம், படியூர்.பல்லடம்-
ராஜம்மாள் கந்தசாமி கவுண்டர் திருமண மண்டபம், வேலம்பாளையம். உடுமலை -சிவா மண்டபம்,ஊத்துக்குளி பெரிய நாயகி அம்மன் திருமண மண்டபம், சாமியார்பாளையம், பொங்கலூர்-ஏஜி திருமண மண்டபம், புத்தரச்சல்.

error: Content is protected !!