News April 16, 2024
தேர்தல் பணியில் 5164 பேர்

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 1042 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 5164 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 95 பேர் மைக்ரோ அப்சர்வர் பணியாற்ற உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
திருப்பத்தூரில் மின்தடை அறிவிப்பு!

திருப்பத்தூர் மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு நாளை (நவ.29) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருப்பத்தூர், கந்திலி, புது பெட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது. மின்பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மேம்பாட்டு பணிகள் காரணமாக திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையான முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டு.
News November 28, 2025
திருப்பத்தூர் தேர்வர்களே தெரிந்து கொள்ளுங்கள் – தேதி மாற்றம்!

தமிழ்நாடு முழுவதும் ‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (நவ.29) நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு, டிசம்பர்.6-ம் தேதி சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்கம் இன்று (நவ.28) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு எழுதும் திருப்பத்தூர் மாணவர்கள் இந்த அறிவிப்பினை தெரிந்து கொள்ளுங்கள் உடனே மற்ற மாணவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ-28) “உனது பாதுகாப்பு உன் கையில் பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவதை மறவாதீர்…! என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.


