News April 16, 2024
தேர்தல் பணியில் 5164 பேர்

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 1042 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 5164 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 95 பேர் மைக்ரோ அப்சர்வர் பணியாற்ற உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
திருப்பத்தூர்: ஒப்பந்ததாரரை கடத்திய 2 பேர்!

திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான இடத்தை, ஜோலார்பேட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் தன் பெயருக்கு மாற்றக்கோரி தனது மகன்களை வைத்து காரில் கடத்திச் சென்றுள்ளார். மேலும், சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய முயன்றுள்ளனர். இதனையடுத்து குமார் கொடுத்த புகாரில், போலீசார் விஷ்ணு மற்றும் சம்பத்தை கைது செய்து இன்று (நவ.22) சிறையில் அடைத்தனர்.
News November 22, 2025
திருப்பத்தூர்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

திருப்பத்தூர் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 22, 2025
திருப்பத்தூர்: GPAY பயனர்களே, இந்த TRICK தெரிஞ்சுக்கோங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


