News April 5, 2024
தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வகுப்பு இன்று ஏப்.5 தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜேன் கிறிஸ்டி உடனிருந்தனர்.
Similar News
News April 19, 2025
பூண்டி வெள்ளிங்கிரி மலையில் தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு.

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவைப்பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இக்கோவிலுக்கு தூத்துக்குடி சமீர் நகரை சேர்ந்த இளைஞர் புவனேஸ்வரன் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். நேற்றிரவு கிரி மலை அருகே இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 19, 2025
தூத்துக்குடியில் சுற்றி பார்க்க வேண்டிய 10 இடங்கள்

▶️திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
▶️மணப்பாடு கடற்கரை
▶️தேரிக்காடு
▶️தூய பனிமய மாதா பேராலயம்
▶️கழுகுமலை வெட்டுவான் கோயில்
▶️வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை
▶️வெளிமான் காப்பகம்
▶️மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மணி மண்டபம்
▶️மயூர தோட்டம்
▶️உப்பளம்
News April 19, 2025
காயல்பட்டினம் திரவ பிரியாணி தெரியுமா?

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் காயல்பட்டினத்தில் பகல், இரவு வேலைகளில் கிடைக்கும் ஒரு வகை திரவ உணவு கறி கஞ்சி. இதனை திரவ பிரியாணி என்றும் அழைக்கிறார்கள். மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த கறி கஞ்சி அரிசி காய்கறி பாசிப்பயிறு இறைச்சி துண்டு, மஞ்சள் இஞ்சி போன்றவைகளால் தயாரிக்கப்படுகிறது. இந்த கறிக்கஞ்சியை ஒரு முறை சுவைத்து பார்த்தால், பின் காயல்பட்டினம் சென்றால் இதனை ருசிக்காமல் இருக்க மாட்டீர்கள்.