News March 29, 2024
தேர்தல் நடத்தை விதி மீறல்: 150 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மார்ச்.25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை அதிமுகவினர் மீறியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஜெயபெருமாள், மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி உட்பட 150 பேர் மீது போலீசார் நேற்று மதியம் வழக்கு பதிந்தனர்.
Similar News
News September 15, 2025
ராமநாதபுரத்தில் இங்கெல்லாம் மின்தடை

நகரிகாத்தான் துணை மின் நிலையத்தில் நாளை (செப்16) பராமரிப்பு பணி மேற்கொள்வதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திருவாடானை, சி.கே மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையாபுரம், மங்களகுடி, அஞ்சுக்கோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூர், எட்டுக்குடி, மல்லனூர், ஓரியூர், அரசூர், டி.நாகனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ளவர்களுக்கு SHRE செய்ங்க.
News September 14, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News September 14, 2025
ராமநாதபுரம் மக்களே எச்சரிக்கை

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்று அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுபோன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.