News January 22, 2025

தேர்தல் அலுவலர் மாற்றம் (2/2)

image

இடைத்தேர்தலில் கர்நாடாகவைச் சேர்ந்த பத்மாவதியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. அது எப்படி அவரது மனுவை ஏற்கலாம் என சுயேச்சை வேட்பாளர் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்சையான பிறகு அவரது வேட்புமனு ரத்து செய்யப்பட்டது. வேறு மாநிலத்தில் வாக்குரிமை வைத்திருப்பவர், மற்றொரு மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என விதியுள்ளது. இதனையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததால், தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டார்.

Similar News

News November 21, 2025

ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை – 7 ஆண்டு சிறை!

image

ஈரோடு, சித்தோடு கொங்கம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (69). 8.7.2024 அன்று கோவிலுக்கு வந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கம்பக்கத்தினர் கண்டு சிறுமியை மீட்டு பவானி மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் அவரை கைது செய்தனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணகுமார் சுப்பிரமணிக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்ததுடன், சிறுமிக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்க பரிந்துரைத்தார்.

News November 21, 2025

அந்தியூர் அருகே திருநங்கை தற்கொலை

image

அந்தியூர் அருகே கழுதைப்பாலி கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை ரபியா (27) கடந்த சில மாதங்களாக ஒருவருடன் கைப்பேசியில் பேசிவந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு திடீரென அறைக்குள் சென்று ரபியா சேலையால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டாலும், மருத்துவமனையில் அவர் இறந்ததாக கூறப்பட்டது. அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 21, 2025

ஈரோடு மாவட்டத்தில் நவ.26 முதலமைச்சர் சுற்றுபயணம்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26/11/ 2025 ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலை முழு உருவச்சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா, வடுகப்பட்டி ஜெயராமபுரத்தில் பொல்லான் மணிமண்டபம் திறப்பு விழா, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சித்தோடு ஆவினில் பால்வளத்தந்தை எஸ்கே  பரமசிவன் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

error: Content is protected !!