News September 13, 2024
தேமுதிகவின் இருபதாவது ஆண்டு தொடக்க நாள் விழா!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழகமான கேப்டன் ஆலயத்தில் நாளை இருபதாவது ஆண்டு தொடக்க நாள் விழா நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் பங்கேற்கும் இந்நிகழ்வில், விஜயகாந்தின் புதிய வெண்கல சிலையை பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைக்கிறார். இதில், முக்கிய பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News December 18, 2025
சென்னை இளைஞர்களே வந்தது SUPER அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் சார்பில் TNPSC, SSC, IBPS, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 பேருக்கும், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 பேருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. www.cecc.in மூலம் 22.12.25 முதல் 05.01.26 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு 044-25954905, 044-28510537 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்
News December 18, 2025
சென்னை மக்களுக்கு சப்ரைஸ்!

போரூர் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம் ஜன.2026ல் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கி.மீ தூரம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பூந்தமல்லி, போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்கிறது. CMRL அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தப் பாதையில் 13 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும். தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடி வருகிறாராம். ஷேர் பண்ணுங்க.
News December 18, 2025
சென்னை: மாநகராட்சி அலுவலகத்தில் புகுந்த பாம்பு!

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் நுழைந்த பாம்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக நேரத்தில் பாம்பு உள்ளே புகுந்ததால் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பெரும் அச்சம் அடைந்தனர். தகவலறிந்து வந்த ராமாபுரம் தீயணைப்பு வீரர்கள் பதுங்கியிருந்த பாம்பை தேடி பிடித்தனர். இதனால் அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


