News April 22, 2025

தேனீ தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உரிகம் பகுதியிலுள்ள கோவல்லி கிராமத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் நேற்று வழிபாடு நடைபெற்றது. அப்போது புகை காரணமாக அருகில் இருந்த தேன் கூடு கலைந்து தேனீக்கள் மக்கள் மீது தாக்கியது. இதில் மாதேவன் (56) என்பவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த ரித்தேஷ் (18) உள்ளிட்ட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 7, 2025

கிருஷ்ணகிரி: ஹோட்டலில் தரமற்ற உணவா? தயங்காம சொல்லுங்க!

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் சென்னை உணவகத்தில் தேரை, திருவள்ளூர் உணவகத்தில் எலி, கிருஷ்ணகிரி உணவில் பாம்பு என குற்றசாட்டு எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர்!

News December 7, 2025

இயற்கை அழகு நிறைந்த மேலகிரி மலைகள்

image

மேலகிரி மலைகள், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதி ஆகும். பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் பெற்ற இந்த மலைகள் சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும். மேலும், செல்லும் வழி எங்கும் பனி மூட்டம் சூழ ரம்மியமாக காட்சியளிக்கும் மேலகிரி மலைகள் வெளிநாடுகளுக்கு டிரக்கிங் செல்லும் அனுபவத்தை நமக்கு தருகின்றன. இந்த செய்தியை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

கிருஷ்ணகிரி: கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது

image

ஓசூர் அருகே அதிமுக பிரமுகர் ஹரீஷ் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் விசாரணையில், ஹரீஷ் தனது கள்ளக்காதலி மஞ்சுளாவிடம் இருந்து ரூ.80 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். மேலும், மஞ்சுளாவின் மற்றொரு ஆண் நண்பர் மோனிஷ் உடன் பழகக்கூடாது எனத் தொந்தரவு செய்ததால், ஆத்திரமடைந்த மஞ்சுளா கூலிப்படை ஏவிக் கொலை செய்தது தெரியவந்தது. மஞ்சுளா, மோனிஷ் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!