News October 25, 2024
தேனி மாவட்டத்தில் 32 வீடுகள் மழையால் சேதம்

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
தேனி: தங்கையுடன் பைக்கில் சென்றவருக்கு விபத்து

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (32). இவர் நேற்று (டிச.21) அவரது இருசக்கர வாகனத்தில் அவரது தங்கை சுகன்யாவை (29) அழைத்துக் கொண்டு உத்தமபாளையம் பகுதியில் சென்றுள்ளார். அப்பொழுது பாக்யராஜ் என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ இவர்கள் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சகோதரிகள் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு.
News December 23, 2025
ராணுவம் முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு குறைதீர் முகாம் – ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் / படைப்பணியில் பணிபுரிவோர்கள் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் டிச.29 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாலை 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது என தேனி ஆட்சியர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
News December 23, 2025
ராணுவம் முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு குறைதீர் முகாம் – ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் / படைப்பணியில் பணிபுரிவோர்கள் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் டிச.29 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாலை 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது என தேனி ஆட்சியர் அழைப்பு விடுத்திருக்கிறார்.


