News October 25, 2024

தேனி மாவட்டத்தில் 32 வீடுகள் மழையால் சேதம்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

தேனியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்றவர் கைது

image

குமுளி போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.15) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது லோயர் கேம்ப் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்த 60 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News December 16, 2025

தேனி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

image

தேனி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

News December 16, 2025

தேனி: சாலையில் தவறி விழுந்து தொழிலாளி பலி!

image

உத்தமபாளையம் ஞானம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலசுந்தர் (46). இவர் உத்தமபாளையம் கோர்ட் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பைக்குடன் சாலையோரம் விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் GH-ல் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை.

error: Content is protected !!