News October 25, 2024
தேனி மாவட்டத்தில் 32 வீடுகள் மழையால் சேதம்

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
தேனி: எலி மருந்து குடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு.!

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பூவிகா (17). பள்ளி மாணவியான இவருக்கு கடந்த 21ம் தேதி பிறந்தநாள் நடைபெற்றது. பிறந்தநாள் நிகழ்விற்கு பெற்றோர்கள் புது துணி எடுத்து தராததால் பள்ளி மாணவி எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (நவ.26) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News November 28, 2025
தேனி உதவி இயக்குநர்கள் பணி மாறுதல்

தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) இருந்த எஸ்.அண்ணாதுரை தேனி மாவட்ட உதவி இயக்குநர் (தணிக்கை) பணிக்கும் அந்தப் பணியில் இருந்த சி.கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு) பணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மு.முருகையா மாற்றப்பட்டு, மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜ.உம்முள் ஜாமியா நியமிக்கப்பட்டுள்ளார்.
News November 27, 2025
போடி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு சீருடை வழங்கிய எம்பி

போடி ஒன்றியம் கோடாங்கிபட்டியில் ஆதரவற்ற இல்லத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சீருடைகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் ஐயப்பன். அயலக அணி செயலாளர் ராஜன், முஜிப் ரஹ்மான் மற்றும் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆதரவற்ற குழந்தைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


