News March 18, 2024
தேனி மாவட்டத்தில் எச்சரிக்கை!

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஜாதி, மதம் குறித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வகையிலும் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று (18.03.2024) எச்சரித்துள்ளது.
Similar News
News November 19, 2025
தேனி: இலவச பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தொகுதி 2 மற்றும் 2A முதன்மைத் தேர்விற்கு தயராகும் விண்ணப்பதாரர்கள் நேரடி பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 63792 68661 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
News November 19, 2025
தேனி ராணுவத்தில் சேர வாய்ப்பு – கலெக்டர் தகவல்

தேனி: இந்திய ராணுவ பயிற்சி நிலையம் சார்பில் குளிர்கால ராணுவ விளையாட்டுகளின் ட்ரையல்ஸ் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நவ.25 – 29 வரை நடைபெறுகிறது. இதில் தேர்வாகும் நபர்கள் இந்திய ராணுவத்தில் நேரடியாக நைப் சுபேதார், அவில்தார் பதவி நிலைகளில் பணியாற்றலாம். மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தகவல். ஷேர்பண்ணுங்க
News November 19, 2025
தேனி: பூச்சி கடித்ததில் முதியவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், தாடிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (61). கடந்த வாரம் இவர் வீட்டில் இருக்கும் பொழுது விஷப்பூச்சி ஒன்று இவரை கடித்துள்ளது. இதனால் மயக்கம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்து வந்த அவர் நேற்று (நவ.18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


