News March 18, 2024

தேனி மாவட்டத்தில் எச்சரிக்கை!

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஜாதி, மதம் குறித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வகையிலும் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று (18.03.2024) எச்சரித்துள்ளது.

Similar News

News December 21, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 20.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 20, 2025

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்து சேவை செய்தவர்களுக்கு “அவ்வையார் விருது” மார்ச் 8 அன்று வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற தகுதி உடையவர்கள் https://awards.tn.giv.in என்ற இணையதளத்தின் வாயிலாக 31.12.2025-க்குள் பதிவு செய்து வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இணையத்தில் பதிவு செய்த ஆவணங்கள் கையேடாக மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜன.3க்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

News December 20, 2025

தேனி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04546-262112 அணுகலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!