News March 29, 2024
தேனி: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

ஆண்டிப்பட்டி அருகே கொண்டம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மச்சக்காளை – சத்தியா தம்பதி. இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மச்சக்காளை நேற்று மாலை வீட்டில் இருந்த அருவாமனையால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது சத்யாவின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Similar News
News January 9, 2026
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி புகார் செய்வதற்கு உடனடியாக “Drug FreeTN” என்ற செயலியை (Mobile App) பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா ப்ரியா தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (08.01.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News January 8, 2026
தேனியில் இளைஞர் விளையாட்டுப் போட்டி; ரூ.6,000 பரிசு!

இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – 2026’ போட்டிகள் வரும் ஜன.22 முதல் பிப்.08 வரை நடைபெற உள்ளது. https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜன. 21-க்குள் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.6,000 வரை பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.


