News March 29, 2024
தேனி: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

ஆண்டிப்பட்டி அருகே கொண்டம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மச்சக்காளை – சத்தியா தம்பதி. இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மச்சக்காளை நேற்று மாலை வீட்டில் இருந்த அருவாமனையால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது சத்யாவின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Similar News
News January 5, 2026
தேனி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 5, 2026
தேனி: வீட்டில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு..

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனி (34). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு திடீரென ஜனார்த்தனிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன நிலையில், வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். கம்பம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அழைத்து சென்ற பொழுது அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்கு (ஜன.4) பதிந்துள்ளனர்.
News January 5, 2026
தேனி மக்களே கந்துவட்டி தொல்லை; இனி இல்லை..

தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க


