News April 25, 2025

தேனி : பாவமன்னிப்பு தரும் கண்ணகி கோவில்

image

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி அடிவாரத்தில் அமைந்துள்ளது மங்கலநாயகி கண்ணகி தேவி கோயில். இந்த கோயிலில் கண்ணகி, சிவன், சாய்பாபா, சங்கிலி கருப்பன், நவகிரகங்கள் உள்ளிட்ட 63க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளது. கடந்த காலங்களில் முன்னோர்களுக்கு தீங்கு விளைவித்து கர்ம வினைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள், பாவமன்னிப்பு கேட்டு வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

Similar News

News December 31, 2025

தேனி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News December 31, 2025

தேனியில் முதியவருக்கு நேர்ந்த சோகம்!

image

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் சுருளிராஜ் (70). இவருக்கு சுகர், பிரசர் இருந்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போடியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சுருளிராஜ் வரும் வழியில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.30) அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News December 31, 2025

தேனி: இ-சேவை, ஆதார் மையங்கள் 2 நாட்கள் இயங்காது

image

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில் மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (டிச.31) மற்றும் நாளை (ஜன.01) ஆகிய இரண்டு நாட்கள் மேற்படி மையங்கள் செயல்படாது என பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேற்படி, மையங்கள் 02.01.2026 முதல் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!