News April 11, 2025

தேனி: பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் மீது கார் மோதி 7 பேர் காயம்

image

கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு பஸ் ஏறுவதற்காகப் பயணிகள் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் மார்க்கையன்கோட்டையை சேர்ந்த பாஸ்கரன் உள்ளிட்ட 7 பேர் பலத்த காயமடைந்தனர். காரை ஒட்டி வந்த கம்பத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் கிஷோர்குமார் 32 , கைது செய்யப்பட்டார்.

Similar News

News December 9, 2025

கம்பத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

image

கம்பம் பகுதியில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு நேற்று (டிச.8) தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது 11 பேர் சட்ட விரோதமாக பணம் மற்றும் டோக்கன்கள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

News December 9, 2025

தேனி: கிணற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

image

குச்சனூர் அருகே கு.துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (38). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குமார் குளிக்கச் சென்ற போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு (டிச.8) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News December 9, 2025

தேனி: கிணற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.!

image

குச்சனூர் அருகே கு.துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (38). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குமார் குளிக்கச் சென்ற போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு (டிச.8) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

error: Content is protected !!