News April 22, 2025
தேனி : தாய்க்கு மகன் கட்டிய கோவில்

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகந்த் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் ஜெயமீனா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தனது தாயின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக சுருளி அருவியில் 85 அடி உயரத்தில் ஜெயமீனா என்ற பெயரில் கோவிலை கட்டி உள்ளார் .தாய்க்காக மகன் கட்டிய கோவிலை காண பலரும் சென்று வருகின்றனர்.
Similar News
News October 22, 2025
தேனி: வேலை தேடுபவர்களுக்கு அக்.24ல் வேலை உறுதி.!

தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்து உள்ளார். இம்முகாம் 24.10.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் வேலை தேடுபவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News October 22, 2025
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கனமழை பெய்து வருதாலும், ஆற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் யாரும் ஆற்றுப்பகுதிகளில் வேடிக்கை பார்க்க செல்வது, செல்பி எடுப்பது மற்றும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
தேனி: நிலம் வாங்க ரூ.5 லட்சம்., இத பன்னுங்க

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 % முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.