News March 28, 2024

தேனி: குளு குளு மலர் கண்காட்சி

image

கூடலூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் குமுளி கிராம பஞ்சாயத்து மற்றும் தேக்கடி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி இணைந்து நடத்தும்16 வது மலர் கண்காட்சி மார்ச் 27 முதல் மே 12 வரை நடைபெறுகிறது. இதில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் மற்றும் வீட்டு அலங்கார செடிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

Similar News

News December 3, 2025

தேனி: சண்டையை தடுத்தவருக்கு அரிவாள் வெட்டு!

image

பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த செல்வம், சாம் ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். சண்டையை முத்துச்சாமி விலக்கி விட்ட நிலையில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து அரிவாளால் முத்துசாமியை தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரில் போலீசார் தாக்கிய இருவர் மீதும் வழக்கு (டிச.2) பதிவு.

News December 3, 2025

தேனி: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்..!

image

தேனி மக்களே, டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News December 3, 2025

தேனி: இளம் பெண்ணிடம் ரூ.6.30 லட்சம் மோசடி

image

தேனி, கோட்டைப்பட்டியை சேர்ந்த பானுமதி (30) அரசு ஐடிஐ.,யில் பிட்டர் படித்து அப்ரண்டிஸாக அரசு போக்குவரத்துக் கழக டெப்போவில் 2019ல் பயிற்சி பெற்றார். இவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றும் பழனிவேல் என்பவர் ரூ.6.30 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். தேனி போலீசார் பழனிவேல் மீது நேற்று (டிச.2) வழக்கு பதிவு.

error: Content is protected !!