News March 28, 2024
தேனி: குளு குளு மலர் கண்காட்சி

கூடலூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் குமுளி கிராம பஞ்சாயத்து மற்றும் தேக்கடி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி இணைந்து நடத்தும்16 வது மலர் கண்காட்சி மார்ச் 27 முதல் மே 12 வரை நடைபெறுகிறது. இதில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் மற்றும் வீட்டு அலங்கார செடிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
Similar News
News November 28, 2025
BREAKING தேனியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை (நவ.29) சனிக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘டித்வா’ புயல் எச்சரிக்கை காரணமாக, மாணவர்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
News November 28, 2025
தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 28.11.2025 வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டதில் உள்ள விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர். குறைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
News November 28, 2025
தேனி: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! APPLY NOW

தேனி மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இங்கு <


