News March 28, 2024

தேனி: குளு குளு மலர் கண்காட்சி

image

கூடலூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் குமுளி கிராம பஞ்சாயத்து மற்றும் தேக்கடி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி இணைந்து நடத்தும்16 வது மலர் கண்காட்சி மார்ச் 27 முதல் மே 12 வரை நடைபெறுகிறது. இதில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் மற்றும் வீட்டு அலங்கார செடிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

Similar News

News December 18, 2025

தேனி: குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

image

தேனி மாவட்டத்தில் வசிப்பவர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் நியாய விலை கடையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் அல்லது தமிழ்நாட்டில் எந்த ஒரு நியாய விலை கடைகளிலும் டிச.31ம் தேதிக்குள் கைரேகை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 18, 2025

தேனி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <>www.tahdco.com<<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

News December 18, 2025

தேனி: மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன்

image

போடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் வாஞ்சிநாதன், கெளசல்யா. அரசு பள்ளி ஆசிரியரான வாஞ்சிநாதனுக்கும் மற்றொரு ஆசிரியருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட கெளசல்யாவையும், இவரது குழந்தைகளையும் வாஞ்சிநாதன் தாக்கி கெளசல்யா பெயரில் உள்ள நிலத்தை தன் பெயரில் மாற்றி தருமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!