News March 28, 2024
தேனி: குளு குளு மலர் கண்காட்சி

கூடலூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் குமுளி கிராம பஞ்சாயத்து மற்றும் தேக்கடி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி இணைந்து நடத்தும்16 வது மலர் கண்காட்சி மார்ச் 27 முதல் மே 12 வரை நடைபெறுகிறது. இதில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் மற்றும் வீட்டு அலங்கார செடிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
Similar News
News December 15, 2025
தேனி: மனைவியின் தங்கையை தாக்கிய கணவர் கைது

மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்தவர் பூமாதா. இவரது அக்கா கோமதாவின் கணவரான சுரேஷ் என்பவர் அடிக்கடி குடித்துவிட்டு அவரது மனைவியுடன் சண்டை போட்டு உள்ளார். இதுகுறித்து பூமாதா கேட்ட நிலையில் சுரேஷ் அவரை சரமாரியாக தாக்கியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை நேற்று (டிச.14) கைது செய்தனர்.
News December 15, 2025
தேனி: மகளிர் உரிமை தொகை வரலையா.? அரசு அறிவிப்பு

தேனி மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 15, 2025
தேனி: பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது!

சின்னமனூர் போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக எரசக்கநாயக்கனூர் பகுதியில் நேற்று (டிச.14) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சின்னசாமி, பாண்டி, கார்த்திக், வேல்முருகன், மணிகண்டன் ஆகியோர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


