News March 28, 2024

தேனி: குளு குளு மலர் கண்காட்சி

image

கூடலூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் குமுளி கிராம பஞ்சாயத்து மற்றும் தேக்கடி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி இணைந்து நடத்தும்16 வது மலர் கண்காட்சி மார்ச் 27 முதல் மே 12 வரை நடைபெறுகிறது. இதில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் மற்றும் வீட்டு அலங்கார செடிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

Similar News

News December 30, 2025

தேனி: கீழே தவறி விழுந்து பரிதாப பலி

image

ராஜதானி பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (41). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் ஆண்டிப்பட்டி பகுதியில் கீழே விழுந்து பேச்சு மூச்சின்றி கிடப்பதாக உறவினர் மூலம் தெரியவந்தது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News December 30, 2025

தேனி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 30, 2025

தேனி: தாய் கண்டித்ததால் மாணவி விபரீத முடிவு

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் சிவயாழினி (15). பத்தாம் வகுப்பு மாணவியான இவருக்கு தற்பொழுது அரையாண்டு விடுமுறை என்பதால் அவரது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். மாணவியின் தாயார் அவரை கண்டித்து அவரது வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் நேற்று (டிச.29) வீட்டில் யாரும் இல்லாத பொழுது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலை குறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரணை.

error: Content is protected !!