News May 17, 2024

தேனி: காவல் ஆய்வாளர் திடீர் மரணம்

image

தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் நடேசன். இவர் தனது சொந்த ஊர் சீலையம்பட்டியில் புதிய வீடு கட்டி புதுமனை புகுவிழா வைத்திருந்தார். இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திடீரென உயிரிழந்த காரணத்தால் அப்பகுதி சீலையம்பட்டி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 21, 2025

தேனி: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

image

தேனி மக்களே, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி : டிச. 14 ஆகும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News November 21, 2025

தேனி அருகே சிறுமி கர்ப்பம்…பாய்ந்த போக்சோ

image

தேனி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 15 வயது மாணவி தொடர்ந்து பள்ளிக்கு செல்லவில்லை. இது குறித்த விசாரணையில் சிறுமி அவரது உறவினரான முத்துப்பாண்டி என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்துள்ளார். இதனை பயன்படுத்திய முத்துப்பாண்டி சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதால் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் முத்துப்பாண்டி மீது போக்சோ வழக்கு (நவ.20) பதிவு செய்து விசாரணை.

News November 21, 2025

தேனி இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கலெக்டர்.!

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ் பொதுப்பணி கிளார்க், டிரேட்ஸ்மென் ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு திரளணி உத்திரப்பிரதேசம், பரேலியில் உள்ள ஜாட் ரெஜிமெண்டல் மையத்தில் 08.12.2025 முதல் 16.12.2025 வரை நடைபெறவுள்ளது. தேனி மாவட்ட மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!