News May 17, 2024
தேனி: காவல் ஆய்வாளர் திடீர் மரணம்

தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் நடேசன். இவர் தனது சொந்த ஊர் சீலையம்பட்டியில் புதிய வீடு கட்டி புதுமனை புகுவிழா வைத்திருந்தார். இந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திடீரென உயிரிழந்த காரணத்தால் அப்பகுதி சீலையம்பட்டி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 15, 2025
தேனியில் பட்டப் பகலில் வீடு புகுந்து திருட்டு

ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் அப்பகுதியில் உள்ள சகோதரரின் தோட்டத்தை வீட்டில் தங்கி இருந்து தோட்டத்தை கவனித்து வந்துள்ளார். நேற்று (அக்.14) காலை வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் தோட்டத்து வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது வீட்டில் வைக்கப்பட்டிருந்த டிவி திருடப்பட்டு தெரிய வந்தது. திருட்டு சம்பவம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News October 15, 2025
தேனி அருகே பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி

தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் 22.10.2025 தேதி முதல் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 22.10.2025 தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு இந்த 8870376796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News October 15, 2025
தேனியில் 11 பேர் சேர்ந்து தம்பதி மீது தாக்குதல்

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்(32). இவரது மனைவி சங்கீதா (30). அதே பகுதியை சேர்ந்த விஸ்வா என்பவருக்கும் ராம்குமாருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக நேற்று முன்தினம் விஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ராம்குமாரை தாக்கி உள்ளனர். அதனை தடுக்க சென்ற சங்கீதாவையும் அந்த கும்பல் தாக்கியது. இது குறித்து சின்னமனூர் போலீசார் விஸ்வா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு (அக்.14) பதிவு