News May 17, 2024
தேனி: களத்தில் இறங்கிய விவசாயிகள்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கம்போல் ஜூன் மாதத்தில் முல்லைப் பெரியாற்றில் நீர் திறக்கப்பட்டு வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு நீர் வந்து சேரும். ஆனால் பொதுப்பணித்துறை எந்த வாய்க்காலையும் தூர்வாராத காரணத்தினால் விவசாயிகள் ஒன்று கூடி தனது சொந்தச் செலவில் வாய்க்கால்களை தூர்வார முடிவெடுத்து களமிறங்கி உள்ளனர்.
Similar News
News December 6, 2025
தேனி: இனி Whatsapp மூலம் ஆதார் கார்டு..!

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 5, 2025
தேனி: போலீசாரால் 2088.180 லிட்டர் மது அழிப்பு

தேனி மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவினரால் கடந்த 2017 முதல் 2024 வரையான காலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர்களின் மீது 1231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 11,601 மதுபான பாட்டில்கள் (2088.180 லிட்டர்) மதிப்பு கைப்பற்றப்பட்டது. அதனை இன்று போலீசார் அரசின் Buy Back Scheme விதிமுறைகளின்படி முறையாக கொட்டி அழித்தனர்.
News December 5, 2025
தேனி: புனிதப்பயணம் சென்ற கிறிஸ்தவர்களுக்கு மானியம்

தேனி மாவட்டத்தில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்துவர்களுக்கு ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.


