News May 17, 2024

தேனி: களத்தில் இறங்கிய விவசாயிகள் 

image

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கம்போல் ஜூன் மாதத்தில் முல்லைப் பெரியாற்றில் நீர் திறக்கப்பட்டு வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு நீர் வந்து சேரும். ஆனால் பொதுப்பணித்துறை எந்த வாய்க்காலையும் தூர்வாராத காரணத்தினால் விவசாயிகள் ஒன்று கூடி தனது சொந்தச் செலவில் வாய்க்கால்களை தூர்வார முடிவெடுத்து களமிறங்கி உள்ளனர்.

Similar News

News December 5, 2025

தேனி: அரசு ஊழியர்கள் 75 பேர் கைது!

image

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நேற்று (டிச.4) கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அகவிலைப்படி உயா்வு, ஒப்பந்த விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை எண் 152.ஐ ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை தேனி போலீசார் கைது செய்தனர்.

News December 5, 2025

தேனி: 10th முடித்தால் அரசு பள்ளி வேலை., மீண்டும் வாய்ப்பு

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

News December 5, 2025

சின்னமனூர்: டூவீலர் மோதி முதியவர் படுகாயம்!

image

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (62). இவர் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு பின்னால் விஜய் என்பவர் ஓட்டி வந்த பைக் ரவி மீது மோதியது. இந்த விபத்தில் ரவி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் விஜய் மீது வழக்கு (டிச.3) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!