News May 17, 2024

தேனி: களத்தில் இறங்கிய விவசாயிகள் 

image

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கம்போல் ஜூன் மாதத்தில் முல்லைப் பெரியாற்றில் நீர் திறக்கப்பட்டு வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு நீர் வந்து சேரும். ஆனால் பொதுப்பணித்துறை எந்த வாய்க்காலையும் தூர்வாராத காரணத்தினால் விவசாயிகள் ஒன்று கூடி தனது சொந்தச் செலவில் வாய்க்கால்களை தூர்வார முடிவெடுத்து களமிறங்கி உள்ளனர்.

Similar News

News December 10, 2025

தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in/<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE.

News December 10, 2025

தேனி: பெண் தூக்கிட்டு தற்கொலை

image

இராஜதானி அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகு (44). இவருக்கு சற்று கண் குறைபாடு உள்ள நிலையில் அவரது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கண் குறைபாடு காரணமாக மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த நாகு நேற்று (டிச.9) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து இராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 10, 2025

தேனி: வெந்நீரில் தவறி விழுந்து குழந்தை பலி!

image

கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த தம்பதி ராஜேஷ்கண்ணன்- கீர்த்திகா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். டிச.1 அன்று கீர்த்திகா, வெந்நீர் வைத்து விட்டு துணி எடுக்க சென்றபோது அங்கு 2வது மகள் பிரணிவிகா ஸ்ரீ வெந்நீரில் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!