News April 16, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி 

image

கம்பம் பகுதியை சோ்ந்தவா் பிரபாகரன் ( 52). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 12 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபாகரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஏப்.15) அவர் உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 19, 2025

ஆண்டிபட்டி துணைமின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் நாளை (டிச.20) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஆண்டிபட்டி, டி. சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

News December 19, 2025

தேனி: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் தண்டனை

image

போடி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ். இவர் அதே பகுதியில் 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடந்த 2024 மே.8ல் செல்வராஜூவை கைது செய்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணை நேற்று முடிந்த நிலையில் செல்வராஜூக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதித்தும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.

News December 19, 2025

நலவாரிய அட்டையில் போட்டோ, கையெழுத்து மாற்ற அழைப்பு

image

தேனி மாவட்டத்தில் கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்த நலவாரிய அட்டையில் உறுப்பினரின் புகைப்படம், கையெழுத்து அவரவர் இருக்கும் இடத்திலோ, அல்லது இ-சேவை மையத்திலோ இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அவ்வாறு மாற்றம் செய்ய முடியாதவர்கள் தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என தகவல்.

error: Content is protected !!