News April 16, 2024
தேனி அருகே விபத்து: ஒருவர் பலி

கம்பம் பகுதியை சோ்ந்தவா் பிரபாகரன் ( 52). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 12 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபாகரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஏப்.15) அவர் உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 9, 2026
தேனி: மகளிர் உரிமை தொகை வரலையா.? முக்கிய அறிவிப்பு

தேனி மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 9, 2026
தேனியில் FREE வக்கீல் சேவை..! தெரிஞ்சிக்கோங்க…

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 9, 2026
தேனியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு…!

ஆண்டிபட்டி அருகேயுள்ள தா்மத்துப்பட்டி விலக்கு பகுதியில் பால்ராஜ் என்பவா் டீக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது கடை அருகே பாப்பம்மாள்புரத்தை சோ்ந்த செல்வி என்பவா் மாட்டுத் தீவனக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பால்ராஜ், செல்வி ஆகியோரது கடைகளின் பூட்டை உடைத்து ரூ.98,000 மற்றும் 5,000 மதிப்பிலான பொருள்கள் திருபட்டன. இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


