News April 15, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி 

image

பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று தனது டூவீலரில் செட்டிகுளம் கண்மாய் அருகே சென்ற போது எதிரே வந்த வேன் மோதியதில் தலையில் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

தேனி: அரசு பேருந்து ஏறி இறங்கியதில் முதியவர் உயிரிழப்பு

image

தேனியை சேர்ந்தவர் விஜயன் (63). இவர் நேற்று (டிச.5) ஆண்டிபட்டியில் நடந்த துக்க நிகழ்வில் கலந்து விட்டு அரசு பேருந்தில் தேனி வந்துள்ளார். தேனி புதிய பேருந்து நிலையம் அருகே விஜயன் பேருந்தில் இருந்து இறங்கிய போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பேருந்தின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு.

News December 6, 2025

தேனி: கம்மியான விலையில் கார், பைக் வேண்டுமா?

image

தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 டூவீலர்கள், 2 மூன்று சக்கரம், 30 நான்கு சக்கர வாகனம், 4 லாரிகள் மற்றும் 6 படகுகள் மொத்தம் 72 வாகனங்கள், 22, 23ம் தேதியில் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுக்க விரும்பும் தேனி மாவட்டத்தை சேர்ந்தோர் 9788924045 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை SHARE IT.

News December 6, 2025

தேனி: தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

image

பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மேலத் தெருவை சார்ந்தவர் காசிநாதன். 3 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வில் வந்து பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் சிவனடியராக உள்ளார். இவரது நண்பர் அண்ணாத்துரை. காசிநாதனை வீட்டிற்கு சாப்பாட்டுக்கு அழைத்து சென்ற போது அண்ணாத்துரை மகன் முகிலன் யாசகரை ஏன் அழைத்து வந்தாய் என தகப்பனாரையும், யாசகரையும் அரிவாளால் வெட்டினார். தென்கரை போலீசார் வழக்கு பதிவு.

error: Content is protected !!