News April 15, 2024
தேனி அருகே விபத்து: ஒருவர் பலி

பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று தனது டூவீலரில் செட்டிகுளம் கண்மாய் அருகே சென்ற போது எதிரே வந்த வேன் மோதியதில் தலையில் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
பெரியகுளத்தில் பைக் திருட்டு; போலீசார் விசாரணை

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரது பைக்கை பெரியகுளம் அண்ணா சிலை அருகே நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்த பொழுது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பைக் திருடப்பட்டது தெரியவந்தது. திருட்டு சம்பவம் குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு (டிச.15) பதிவு செய்து விசாரணை.
News December 16, 2025
தேனி: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

தேனி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<
News December 16, 2025
தேனியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்றவர் கைது

குமுளி போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.15) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது லோயர் கேம்ப் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்த 60 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


