News March 27, 2025
தேனியில் வீட்டின் கதவை உடைத்து திருட்டு

ஆண்டிபட்டி அருகே வைகை புத்தூரைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு. குடும்பத்துடன் கோவையில் தங்கிப் பணி செய்து வருகிறார். மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தார். இரு நாட்கள் கழித்து வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைத்து 1 பவுன் சங்கிலி திருடு போயிருந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 28, 2025
JUST IN: தேனியில் பள்ளிகளுக்கு விடுமுறையா.? விளக்கம்

தமிழகத்தில் நாளை (நவ.29) சனிக்கிழமையன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக பரவிய தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பள்ளிகள் விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவர் என்றும், தற்போது பரவிய தகவல் உண்மையில்லை என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
BREAKING தேனியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை (நவ.29) சனிக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ‘டித்வா’ புயல் எச்சரிக்கை காரணமாக, மாணவர்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
News November 28, 2025
தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று 28.11.2025 வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டதில் உள்ள விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர். குறைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


