News September 13, 2024

தேனியில் புதிய ஏ.எஸ்.பி பொறுப்பேற்பு

image

தூத்துக்குடி டவுனில் பணிபுரிந்து வந்த ஏ.எஸ்.பி கேல்கர் சுப்பிரமணி பாலசந்தரா, தேனி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், தேனி டிஎஸ்பி-ஆக பணிபுரிந்து வந்த பார்த்திபன் சென்னைக்கு பணியிட மாறுதல் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று (செப்.13) தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏஎஸ்பி கேல்கர் சுப்பிரமணி பாலசந்தரா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News November 17, 2025

தேனி மக்களே இது கட்டாயம்..!

image

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளில் குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகள், போலீசாரின் அனுமதி இன்றி தேசிய நெடுஞ்சாலை, மாநிலச் சாலைகளில் தள்ளுவண்டி கடைகள் வைக்க அனுமதி வழங்குகின்றன. தெருவோர கடை உரிமையாளர்கள் உள்ளாட்சிகளில் அனுமதி பெற்றிருந்தாலும் அதற்கான ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்து ஒப்புதல் பெறுவது கட்டாயம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

News November 17, 2025

தேனி: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

தேனி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 17, 2025

தேனி: மனைவிக்கு கொடுமை-கணவர் உட்பட மூவர் மீது வழக்கு

image

சின்னமனூா் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது கணவர் மதன் காா்த்திக். இவா்களுக்கு கடந்த 2015. ல் திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் மதன் காா்த்திக் தனது மனைவியை ஆபாசமாக திட்டியும் குழந்தைகளை அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் கணவரின் பெற்றோரான மணிகண்டன், மலா்கொடி ஆகியோா் இந்துமதியின் நகைகளை வைத்துக்கொண்டு தர மறுத்துள்ளனர். இதுகுறித்து போடி மகளிர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு.

error: Content is protected !!