News September 13, 2024
தேனியில் புதிய ஏ.எஸ்.பி பொறுப்பேற்பு

தூத்துக்குடி டவுனில் பணிபுரிந்து வந்த ஏ.எஸ்.பி கேல்கர் சுப்பிரமணி பாலசந்தரா, தேனி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், தேனி டிஎஸ்பி-ஆக பணிபுரிந்து வந்த பார்த்திபன் சென்னைக்கு பணியிட மாறுதல் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று (செப்.13) தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏஎஸ்பி கேல்கர் சுப்பிரமணி பாலசந்தரா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News November 18, 2025
தேனி: 3 கிலோ கஞ்சா கடத்திய சிறுவன்

ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.17) ஆண்டிபட்டி செக் போஸ்ட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த முத்துமணி (27), வீரமணி (21), ராஜேஷ் (34), ஹரிஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
News November 18, 2025
தேனி: 3 கிலோ கஞ்சா கடத்திய சிறுவன்

ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.17) ஆண்டிபட்டி செக் போஸ்ட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த முத்துமணி (27), வீரமணி (21), ராஜேஷ் (34), ஹரிஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
News November 18, 2025
தேனி: 10th மாணவி கர்ப்பம் இருவர் போக்சோவில் கைது

ஆண்டிபட்டி ஒன்றியத்தை சேர்ந்த சிறுமி அப்பகுதி பள்ளியில் 10th படித்தார். உடன் பிளஸ் 1 படிக்கும் மாணவருடன் பழகி நெருக்கமுடன் இருந்த நிலையில் அதனை பிச்சைமணி (52) என்பவர் புகைப்படம் எடுத்து அதை சிறுமியிடம் காட்டி சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மாணவரும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். ஆண்டிபட்டி மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்


