News September 13, 2024

தேனியில் புதிய ஏ.எஸ்.பி பொறுப்பேற்பு

image

தூத்துக்குடி டவுனில் பணிபுரிந்து வந்த ஏ.எஸ்.பி கேல்கர் சுப்பிரமணி பாலசந்தரா, தேனி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், தேனி டிஎஸ்பி-ஆக பணிபுரிந்து வந்த பார்த்திபன் சென்னைக்கு பணியிட மாறுதல் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று (செப்.13) தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் ஏஎஸ்பி கேல்கர் சுப்பிரமணி பாலசந்தரா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News October 20, 2025

கம்பத்தில் தொழில் நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (47). இவர் நகை பட்டறை வைத்து தொழில் செய்து வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் நஷ்டம் காரணமாக மன வருத்தத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த நிலையில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு (அக்.19) பதிவு.

News October 20, 2025

தேனி மக்களே தீபவாளி கொண்டாட… இது முக்கியம்

image

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலையம் எண்கள்: போடி:04546-280299, கம்பம்:04554-271292, கடமலைகுண்டு:04554-227226, மயிலாடும்பாறை:04554-227258, பெரியகுளம்: 04546-231299, தேனி:04546-252699,ஆண்டிப்பட்டி:04546-242222, உத்தமபாளையம்: 04554-252699 மகிழ்ச்சியான தீபாவளிக்கு இந்த எண்கள் முக்கியம். SHARE பண்ணுங்க.

News October 20, 2025

தேனி: மழை வெள்ளம் பாதிப்புகள்.. புகார் எண்கள்!

image

தேனி அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!