News October 23, 2024
தேனியில் கால்நடை கணக்கெடுப்பு பணி- ஆட்சியர் தகவல்

தேனி மாவட்டத்தில் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்கப்பட உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளதாகவும் 21வது கால்நடை கணக்கெடுப்பு அக்டோபர் 25ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
தேனி: கையும் களவுமாக சிக்கிய அதிகாரி சஸ்பெண்ட்

தேவாரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய லட்சுமணன் (38), விவசாய இலவச மின் இணைப்பு வழங்க விவசாயி ஒருவரிடம் ரூ.20,000 லஞ்சம் கேட்ட நிலையில் அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக லட்சுமணனை சஸ்பெண்ட் செய்து தேனி மின் மேற்பார்வை பொறியாளர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
News November 25, 2025
தேனி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 25, 2025
போடி அருகே பெண்ணை கடத்திய தாய் உள்ளிட்ட 7 பேர் கைது

போடி மேலச்சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்துராணி (55). இவரது மகன், தீபா (36) என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபா உள்ளிட்ட 7 பேர் இந்துராணியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கி, கடத்தி வெளியே செல்ல விடாமல் அடைத்து வைத்து உள்ளனர். அங்கிருந்து தப்பிய இந்துராணி அளித்த புகாரில் போடி தாலுகா போலீசார் தீபா உள்ளிட்ட 7 பேரை கைது (நவ.24) செய்தனர்.


