News September 28, 2024

தேனியில் கனமழை!

image

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகரிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மழை நீர் தேங்கவும்
வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் குடையுடன் செல்வது நல்லது. SHARE IT.

Similar News

News October 3, 2025

தேனி: மகளுடன் ஏற்பட்ட தகராறால் பறிபோன உயிர்

image

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (47). இவரது மகளான ஜெனிபர் நேற்று முன் தினம் அவரது கணவருடன் தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தந்தை, மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மகள் கோபித்துக் கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த ராஜா நேற்று (அக்.3) அரளி விதையை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.

News October 3, 2025

தேனி: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை ரெடி..APPLY NOW

image

தேனி மக்களே; இந்திய ரயில்வேயில் செக்‌ஷன் கண்ட்ரோலர் பதவியில் 368 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 20-33 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இந்த <>லிங்க் <<>>மூலம் வரும் அக்.14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது ரயில்வேயின் முக்கிய பதவி. ரயில்வே நேரம் கண்காணிப்பு, மேனேஜ்மெண்ட், பதிவுகளை பராமரித்தல் போன்றவை ஆகும். உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்க.

News October 3, 2025

தேனி: பரிதாபமாக போன 3 உயிர்கள்..

image

இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் ஒரு ஹோட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடந்தது.தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயராம், 38,சுந்தர பாண்டியன், 34, மைக்கேல், 36, ஆகியோர் ஈடுபட்டனர். கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் ஜெயராம் இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் சத்தம் ஏதும் வராததால், அவரை பார்க்க சுந்தர பாண்டியனும், மைக்கேலும் தொட்டிக்குள் இறங்கினர். மூவரும் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி பலியாகினர்.

error: Content is protected !!