News August 2, 2024

தேனியில் ஒருவரை கொன்ற 15 பேர்; போலீசார் விசாரணை

image

தேனி மாவட்டம் கரையான்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன்(50). இவரை லட்சுமி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போடி தாலுகா போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாலை கடக்கும்போது ஏற்பட்ட பிரச்சனையில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

Similar News

News January 1, 2026

தேனி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?..

image

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News January 1, 2026

போடி அருகே மனைவி, மாமியாரை தாக்கிய கணவர்

image

போடி அருகே மணியம்பட்டியை சேர்ந்தவர் திவ்யா (28). இவரது கணவர் நாராயணன் (35). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் திவ்யா கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (டிச.31) மாமியார் வீட்டுக்கு சென்ற நாராயணன் மனைவி மற்றும் மாமியாரை தாக்கி உள்ளார். போடி தாலுகா போலீசார் நாராயணனை கைது செய்தனர்.

News January 1, 2026

தேனி: சட்டக் கல்லுாரி மாணவர் மீது தாக்குதல்

image

பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கபிலன் (20). இவர் தேனி அரசு சட்டக்கல்லூரியில் 3.ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் இவருடன் படிக்கும் வசந்தகுமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வசந்தகுமார் அவரது நண்பர்கள் விக்னேஷ்வரன், சரண், செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து கபிலனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் 4 பேர் மீதும் வழக்கு (டிச.31) பதிவு.

error: Content is protected !!