News August 2, 2024

தேனியில் ஒருவரை கொன்ற 15 பேர்; போலீசார் விசாரணை

image

தேனி மாவட்டம் கரையான்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன்(50). இவரை லட்சுமி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போடி தாலுகா போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாலை கடக்கும்போது ஏற்பட்ட பிரச்சனையில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

Similar News

News November 2, 2025

தேனி: வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

image

தேனி வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் க.அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்களுக்கு அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக 772 மி. க.அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் திறப்பால் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

தேனி: கணவர் குடிப்பழக்கத்தால் மனைவி தற்கொலை

image

போடி பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா (25). இவரது கணவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. குடிப்பழக்கத்தின் காரணமாக வீட்டில் இருந்த பொருட்களை அடகு வைத்து கீர்த்தனாவின் கணவர் குடித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கீர்த்தனா நேற்று (நவ. 1) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2025

தேனி: G.H-ல் இவை எல்லாம் இலவசம்!

image

தேனி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தேனி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04546-250387 – 261403 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!