News August 2, 2024

தேனியில் ஒருவரை கொன்ற 15 பேர்; போலீசார் விசாரணை

image

தேனி மாவட்டம் கரையான்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன்(50). இவரை லட்சுமி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போடி தாலுகா போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாலை கடக்கும்போது ஏற்பட்ட பிரச்சனையில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

Similar News

News December 12, 2025

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்து சேவை செய்தவர்களுக்கு “அவ்வையார் விருது” மார்ச் 8 அன்று வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற தகுதி உடையவர்கள் https://awards.tn.giv.in என்ற இணையதளத்தின் வாயிலாக 31.12.2025-க்குள் பதிவு செய்து வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இணையத்தில் பதிவு செய்த ஆவணங்கள் கையேடாக மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 3.1.2026 அன்று சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

News December 12, 2025

தேனியில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்!

image

தேனி வழக்கறிஞர் கணேசன். இவர் தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கில் கண்டமனூர் வேல்முருகனுக்கு கடந்த மாதம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பளித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் அவரது நண்பர் அசோக்குமார் சேர்ந்து வழக்கறிஞர் கார் முன் டயர்களை சேதப்படுத்தி, ஆவணங்களை திருடி சென்றனர். மேலும், அலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வழக்கறிஞர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை.

News December 12, 2025

தேனி மக்களே ரேஷன் கார்டு இருக்கா.. முக்கிய அறிவிப்பு

image

தேனியில் ரேஷன் கார்டு சேவை குறித்த மக்கள் குறைதீர் முகாம் தேவதானப்பட்டி, உப்பார்பட்டி, கொப்பையன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கொட்டக்குடி ஆகிய இடங்களில் நாளை (டிச.13) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு (ம) மாற்றம், கடை மாற்றம் ஆகியவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!