News March 29, 2024
தேனியில் இனி குதூகலம்

தேனி மாவட்டம் சீலையம்பட்டியை மையமாகக் கொண்டு முல்லைப் பெரியாறு ஆறு உள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் இருந்து இளைஞர்கள் கோடைகால விடுமுறையை ஆனந்த குளியல் இட்டு கழிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், அனைத்து இளைஞர்களும் இங்கு வந்து ஆனந்த குளியல் இடுகின்றனர். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரைத் தொடங்கப்பட இருப்பதால் தண்ணீர் வரத்து சற்று மிக குறைவாக உள்ளது.
Similar News
News November 28, 2025
டி.சுப்புலாபுரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்

ஆண்டிபட்டி தாலுகா டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (நவ.29) காலை 10 மணி முதல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடக்கிறது. இம்முகாமில் பொது மருத்துவம், பெண்கள், குழந்தைகள் நலன், பல், கண், மன நல மருத்துவம், நுரையீரல், சர்க்கரை, நோய்களுக்கு சிகிச்சை ஆலோசனை, ரத்தம், சளி எக்கோ, அலட்ரா சோனோகிராம் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல்.
News November 28, 2025
தேனி: முந்திரி சாகுபடி செய்ய ரூ.18 ஆயிரம் மானியம்

தேனி மாவட்டத்தில் 2600 ஹெக்டர் பரப்பில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசு திட்டத்தில் 40 ஹெக்டர் பரப்பு முந்திரி சாகுபடி விரிவாக்கம் செய்ய தோட்டக்கலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு ஹெக்டர்க்கு ரூ.18,000 மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிக்க அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என தோட்டக்கலைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
News November 28, 2025
பெரியகுளம்: சிறுமி கர்ப்பம் – 4 பேர் மீது போக்சோ

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பூர்த்தியடையாத சிறுமியிடம் சருத்துப்பட்டியை சேர்ந்த முத்தநாதன் (20) என்பவர் காதலிப்பதாக கூறி பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இவர்களுக்கு அக்.24.ல் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்த புகாரில் முத்துநாதன், அவரது தாய் அழகு தாய். சிறுமியின் தந்தை வஞ்சிக்கொடி. தாயார் பொன்னுமணி மீது பெரியகுளம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு (நவ.27) பதிவு.


