News March 29, 2024
தேனியில் இனி குதூகலம்

தேனி மாவட்டம் சீலையம்பட்டியை மையமாகக் கொண்டு முல்லைப் பெரியாறு ஆறு உள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் இருந்து இளைஞர்கள் கோடைகால விடுமுறையை ஆனந்த குளியல் இட்டு கழிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், அனைத்து இளைஞர்களும் இங்கு வந்து ஆனந்த குளியல் இடுகின்றனர். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரைத் தொடங்கப்பட இருப்பதால் தண்ணீர் வரத்து சற்று மிக குறைவாக உள்ளது.
Similar News
News October 19, 2025
தேனி அரசு பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (70) ஓட்டலில் காவலாளியாக பணிபுரிந்த இவர் நேற்று (அக்.18) மாலை பணி முடித்து டூவீலரில் வீடு திரும்பினார். போடி விலக்கு அருகே சென்ற போது கம்பத்தில் இருந்து தேனி வழியாக திண்டுக்கல் சென்ற அரசு பேருந்து மோதியதில் கருப்பையா சம்பவ இடத்தில் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News October 19, 2025
பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி

பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (48). இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பினார். பெரியகுளம் தேனி சாலை டி.வி.எஸ்., ஷோரூம் அருகே வந்த போது அதி வேகமாக ஜெரோம் என்பவர் ஓட்டி வந்த டூவீலர், ஜெகதீசன் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெகதீசன் பலியானார். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்கு (அக்.18) பதிவு செய்து விசாரணை
News October 19, 2025
தேனியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தேனி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.