News September 14, 2024
தேனியல் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை பொருள் சிக்கியது

தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளியில் எஸ்ஐ சுனில் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் கடத்திய சர்வதேச மதிப்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 60 கிராம் எம்.டி.எம்.எ (மெத்திலின் எடியோக்சி மெத்தாம்பேட்டமைன்) என்னும் தடை செய்யப்பட்ட போதை பொருளையும், காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்திவந்த பிக்கு(42), அனூப் வர்கீஸ்(37) ஆகியோரையும் கைது செய்தனர்.
Similar News
News November 6, 2025
தேனியில் கண்காணிப்பு பணியில் 600 போலீசார்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பு வீரர்கள் பணிக்கான எழுத்து தேர்வு நவ.9 அன்று நடைபெற உள்ளது. தேனியில் 6 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 6,233 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா நேரடி கண்காணிப்பில் சுமார் 600 போலீசார் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 5, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (05.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News November 5, 2025
தேனி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.


