News April 12, 2025

தேனி:டாக்டரிடம் பழகி திருமணம் செய்து ரூ.9.69 லட்சம் மோசடி

image

தேனியை சேர்ந்தவர் நரேந்திர பிரசாத் 28. டாக்டரான இவர் சென்னையில் பணி செய்கிறார். இவரிடம் முகநுாலில் ஈரோட்டை சேர்ந்த நந்தினி என்பர் பழகினர். பின்பு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். நந்தினி சமூக வலைதளங்களில் பல ஆண்களுடன் பேசினார். இதனை தட்டி கேட்ட நரேந்திர பிரசாத்தை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் ரூ.9.69 லட்சம் வரை மிரட்டி வாங்கியுள்ளா். நந்தினி உட்பட 4 பேர் மீது வழக்கு

Similar News

News December 6, 2025

தேனி: கம்மியான விலையில் கார், பைக் வேண்டுமா?

image

தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 டூவீலர்கள், 2 மூன்று சக்கரம், 30 நான்கு சக்கர வாகனம், 4 லாரிகள் மற்றும் 6 படகுகள் மொத்தம் 72 வாகனங்கள், 22, 23ம் தேதியில் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுக்க விரும்பும் தேனி மாவட்டத்தை சேர்ந்தோர் 9788924045 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை SHARE IT.

News December 6, 2025

தேனி: தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

image

பெரியகுளம் அருகே மேல்மங்கலம் மேலத் தெருவை சார்ந்தவர் காசிநாதன். 3 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வில் வந்து பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் சிவனடியராக உள்ளார். இவரது நண்பர் அண்ணாத்துரை. காசிநாதனை வீட்டிற்கு சாப்பாட்டுக்கு அழைத்து சென்ற போது அண்ணாத்துரை மகன் முகிலன் யாசகரை ஏன் அழைத்து வந்தாய் என தகப்பனாரையும், யாசகரையும் அரிவாளால் வெட்டினார். தென்கரை போலீசார் வழக்கு பதிவு.

News December 6, 2025

தேனியில் தடுப்பூசி செலுத்திய 3 மாணவிகள் மயக்கம்

image

தேனியில் உள்ள பி.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (டிச.5) பொதுச் சுகாதாரத் துறை சாா்பில் மாணவிகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் தடுப்பூசி செலுத்திய 3 மாணவிகள் மயக்கமடைந்தனா். இதையடுத்து தொடர் கண்காணிப்பிற்காக மூன்று மாணவிகளும் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!