News December 31, 2024

தேசிய வருவாய் வழி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

image

நடப்பு கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய வருவாய் வழி & திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு பிப்.22ல் நடைபெறவுள்ளது. மாணவர்கள் இன்று முதல் இணையதள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஜன.24ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என நெல்லை சி இ ஓ சிவக்குமார் தெரிவித்துள்ளார். வெற்றி பெறுவோருக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். *ஷேர்

Similar News

News December 16, 2025

நெல்லை: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

image

திருநெல்வேலி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News December 16, 2025

நெல்லை முன்னாள் துணை மேயர் மறைவு

image

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் அதிமுக துணை மேயரும், தற்போதைய 30வது வார்டு கவுன்சிலருமான P.ஜெகநாதன் என்ற கணேசன் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருடைய மறைவு குறித்து அதிமுக நெல்லை மாவட்ட செயலாளார் தச்சை N.கணேச ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர்.

News December 16, 2025

நெல்லை: பெட்ரோல் குண்டு வீச்சு.. சிறுவர்கள் கைது

image

வி.கேபுரம் அருகே அம்பலவாணபுரம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மதன் (21) என்பவரின் விலை உயர்ந்த பைக்கை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 4 சிறுவர்கள் மற்றும் மணிகண்டன் (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சிறுவன் பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!