News December 31, 2024
தேசிய வருவாய் வழி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

நடப்பு கல்வியாண்டில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய வருவாய் வழி & திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு பிப்.22ல் நடைபெறவுள்ளது. மாணவர்கள் இன்று முதல் இணையதள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஜன.24ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என நெல்லை சி இ ஓ சிவக்குமார் தெரிவித்துள்ளார். வெற்றி பெறுவோருக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். *ஷேர்
Similar News
News November 7, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.6] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தாமரை கண்ணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News November 6, 2025
நெல்லை: ம.சு பல்கலையில் வினாத்தாள் மாறியதால் குழப்பம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 60 மையங்களில் இன்று பி.காம் 3ம் ஆண்டு மேனேஜ்மென்ட் அக்கவுண்ட் அரியர் தேர்வு நடைபெற்றது. இந்த வினாத்தாளுக்கு பதில் ரீடைல் மேனேஜ்மென்ட் என்ற வினாத்தாள் தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சரியான வினாத்தாள் வழங்கப்பட்டு கூடுதல் அவகாசம் வழங்கி தேர்வு நடத்தப்பட்டது.
News November 6, 2025
JUST IN: நெல்லையில் தோற்றால் பதவி பறிப்பு – ஸ்டாலின் அதிரடி!

நெல்லையில் உடன்பிறப்பே வா நடைபெற்ற நிகழ்வில் நெல்லை, தென்காசி மாவட்ட திமுக நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் என மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை. நெல்லையில் நயினார் நாகேந்திரன் மறுபடியும் போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும் என திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.


