News March 25, 2025
தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானையால் பரபரப்பு

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒற்றை காட்டு யானை நேற்று மதியம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் டபுள் ரோடு அருகே சாலையின் குறுக்கே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்தி விட்டனர்.
Similar News
News December 3, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் 18-55 வயது வரை உள்ள பெண்கள் ரூ.10 இலட்சம் வரை கடன் பெற்று தொழில்களை 25% மானியத்துடன் தொடங்கலாம். இந்த திட்டத்தின் கடன் தொகையை தேசிய வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தொழில் தொடங்க www.msmeonline.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னிரு தெரிவித்தார்
News December 3, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.2) இரவு முதல் இன்று (டிச.3) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News December 3, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.2) இரவு முதல் இன்று (டிச.3) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


