News March 25, 2025
தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானையால் பரபரப்பு

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒற்றை காட்டு யானை நேற்று மதியம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் டபுள் ரோடு அருகே சாலையின் குறுக்கே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்தி விட்டனர்.
Similar News
News November 20, 2025
நீலகிரி: முதியவர் காருடன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

நீலகிரி: சேரம்பாடியில் இருந்து பந்தலூரை நோக்கி காரை ஓட்டி சென்ற ஒரு முதியவர், கட்டுப்பாட்டை இழந்ததால், அருகில் இருந்த புதரில் கார் தலைகீழாக கவிழ்ந்தது. வாகனம் விழுந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முதியவரை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட அவர் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
News November 20, 2025
நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
News November 20, 2025
நீலகிரியில் தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

நீலகிரியில் வேளாண் விலை பொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக₹1.50 கோடியும் பொதுப்பிரிவினருக்கு 25%,பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35%, மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான
விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையாக (05/12/2025)-க்குள் தயாரித்து வங்கியில் கடன் ஒப்புதல் பெற அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.


