News March 25, 2025
தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானையால் பரபரப்பு

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒற்றை காட்டு யானை நேற்று மதியம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் டபுள் ரோடு அருகே சாலையின் குறுக்கே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்தி விட்டனர்.
Similar News
News December 7, 2025
நீலகிரி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

நீலகிரி மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு வேலைக்கு ஏற்ப டிப்ளமோ, பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.10ம் தேதிக்குள், <
News December 7, 2025
நீலகிரியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஊட்டி அருகேயுள்ள அதிகரட்டி துணை மின்நிலையத்தில் நாளை (டிச.08) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்றார்போல் பொதுமக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News December 7, 2025
நீலகிரியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஊட்டி அருகேயுள்ள அதிகரட்டி துணை மின்நிலையத்தில் நாளை (டிச.08) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்றார்போல் பொதுமக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.


