News March 25, 2025

தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானையால் பரபரப்பு

image

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒற்றை காட்டு யானை நேற்று மதியம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் டபுள் ரோடு அருகே சாலையின் குறுக்கே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்தி விட்டனர்.

Similar News

News September 15, 2025

நீலகிரி: லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்!

image

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தேவாலா போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர், எஸ்.எஸ்.ஐ.,ரங்கராஜ். இவர் ரோந்து வாகனத்தில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார். செப்.7- இரவு, நாடுகாணி வழியாக கேரள மாநிலம், மலப்புரத்திற்கு காய்கறி கொண்டு செல்லும் லாரியை நிறுத்தி, டிரைவரிடம் லஞ்சம் வாங்கினார். இந்த வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலானது. எஸ்.பி.,நிஷா விசாரணையில், ரங்கராஜ் நேற்று சஸ்பெண்ட் செய்யபட்டார்.

News September 15, 2025

கூடலூர்: உதகை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

image

கூடலூர் அரசு மருத்துவமனை அருகே உதகை நோக்கி சுற்றுலாவிற்கு வந்த கேரளா பகுதியைச் சேர்ந்தவர்களின் வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் உதவியால் அவர்களை அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

News September 14, 2025

நீலகிரி: ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!