News August 15, 2024
தேசிய கொடி ஏற்றிய மதுரை மேயர்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியினை மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று(ஆக.,15) ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் ஆணையாளர் தினேஷ் குமார், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர்பாண்டிச்செல்வி , கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 2, 2025
மதுரைக்கு கிடைத்த முதலிடம்: மக்கள் வேதனை

மத்திய அரசின் தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டுக்கான இந்தியாவில் அசுத்தமான 10 நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மதுரை முதலிடத்தில் உள்ளது. சென்னை 4-ம் இடத்தில் உள்ளது. திட்டமிடப்படாத விரிவாக்கம், மோசமான கழிவு மேலாண்மை, சுகாதார அலட்சியம் ஆகியவற்றை கொண்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அகமதாபாத், போபால், லக்னோ ஆகியவை தூய்மை நகரங்கள் இடத்தை பிடித்துள்ளன.
News November 2, 2025
மதுரையில் அடுத்தடுத்து நகை பறிப்பு

மதுரை ஆரப்பாளையம், SS காலனி பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் (70) வீட்டில் தனியாக இருந்த போது அங்கே மர்மநபர், பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து சென்றார். இதேபோல, மதுரை பைபாஸ்ரோடு பகுதியில் வங்கி மேலாளர் சக்திவேல் மனைவி லட்சிகாவிடம் டூவீலரில் வந்த 2 மர்மநபர்கள் 9 பவுன் நகையை பறித்தனர். ஒரேநாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த நகை பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 2, 2025
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


