News April 15, 2024

தொலைதூர கல்வி தேர்வு

image

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரம் மற்றும் இணையவழி கல்வி முறையில் 2024 ஆம் ஆண்டில் சேர்க்கை பெற்ற மாணவருக்கு தேர்வு விண்ணப்பித்தல் விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது http/https:/coe.annamalaiuniversity.ac.in/bank/examreg.php என்ற தளத்தில் இன்று முதல் தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வுக்கான அட்டவணையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 14, 2025

கடலூர்: 4 வயது சிறுமி விபத்தில் பரிதாப பலி

image

ஆண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அபிநயா(25). இவர் தனது குழந்தைகள் அனித்ரா(4), ஆதிரன்(1) ஆகியோரை மொபட்டில் ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று, முன்னாள் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய டூவீலர் அபிநயாவின் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி அனித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.

News September 14, 2025

கடலூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

image

கடலூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கே <>க்ளிக் செய்து<<>> இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 14, 2025

கடலூர்: தப்பிக்க முயன்ற இளைஞருக்கு மாவுகட்டு

image

நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன் மனைவி சந்திரகலா (40). முன்விரோதம் காரணமாக இவரது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய 8 பேர் மீது நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ராஜதுரையை (20) நேற்று போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர், தப்பி ஓடிய போது தவறி விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ராஜதுரைக்கு மாவுகட்டு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!