News September 14, 2024
தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியில் இந்தியா முதலிடம்

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூடான், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. தமிழகத்தை சேர்ந்த 7 வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 2 வெள்ளி உள்ளிட்ட 7 பதக்கங்களை வென்ற அசத்தினர்.
Similar News
News December 13, 2025
சென்னை: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க
News December 13, 2025
சென்னை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-25332412. 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)
News December 13, 2025
சென்னை: பொருட்களை வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கிய போது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம்.ஷேர் பண்ணுங்க


