News April 12, 2025

தெப்பக்குளத்தில் மூழ்கி தவில் வித்வான் உயிரிழப்பு

image

பூதப்பாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (42). தவில் வித்வானான இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று மாலை பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தெப்பக்குளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக  கூறப்படுகிறது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 10, 2025

குமரி: இந்தியன் ஆயிலில் 2,757 காலியிடங்கள் அறிவிப்பு

image

குமரி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18-க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இதற்கு தேர்வும், விண்ணப்ப கட்டணமும் கிடையாது. இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

News December 10, 2025

குமரி ரயில் நிலையத்தில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்

image

குமரி ரயில் நிலையத்திற்கு இன்று (டிச.10) வந்த கவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியில் இரண்டு பைகள் கேட்பாடற்று கிடந்தன. அந்த பைகளை ரெயில்வே பாதுகாப்பு படை (RPF) போலீசார் கைப்பற்றி சோதனை செய்த போது, அவற்றில் 18 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 10, 2025

குமரி: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி..!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!