News April 12, 2025

தெப்பக்குளத்தில் மூழ்கி தவில் வித்வான் உயிரிழப்பு

image

பூதப்பாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (42). தவில் வித்வானான இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று மாலை பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தெப்பக்குளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக  கூறப்படுகிறது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 19, 2025

குமரியில் முன்னாள் அமைச்சர் உட்பட 25 பேர் மீது வழக்கு

image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே குறும்பனை பஸ் நிலையத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்குவதாக காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டது. அதில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருமுனை பிரச்சாரம் செய்ததாகவும், காவல்துறை கலைந்து போக கூறியும் போகாததால் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உட்பட 25 பேர் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News October 19, 2025

குமரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

குமரி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News October 19, 2025

குமரியில் சூரிய உதயம் தெரியவில்லை

image

சுற்றுலா மயமான கன்னியாகுமரிக்கு இன்று விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கன்னியாகுமரியில் மழை பெய்து கொண்டிருந்ததால் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே கடற்கரைக்கு வந்திருந்தனர். மழை காரணமாக கடலில் சூரிய உதயம் இன்று தெரியவில்லை. இதனால் சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

error: Content is protected !!