News April 12, 2025
தெப்பக்குளத்தில் மூழ்கி தவில் வித்வான் உயிரிழப்பு

பூதப்பாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (42). தவில் வித்வானான இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று மாலை பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தெப்பக்குளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
குமரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (நவ. 21) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியாதவர்களக்கு SHARE செய்து உதவுங்க.
News November 21, 2025
குமரி: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <
News November 21, 2025
நாகர்கோவிலில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி

மாநில அளவிலான யூத், ஜூனியர், சீனியர் ஆண்கள்,பெண்கள் பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நவ.28, 29, 30 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள முன்னணி பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை நடத்த 20-க்கும் மேற்பட்ட தேசிய நடுவர்களும், 25-க்கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் வருகை தருகின்றனர்.


