News April 12, 2025
தெப்பக்குளத்தில் மூழ்கி தவில் வித்வான் உயிரிழப்பு

பூதப்பாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (42). தவில் வித்வானான இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று மாலை பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தெப்பக்குளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
குமரி: நாளை எங்கெல்லாம் மின்தடை?

குமரி மாவட்ட துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (டிச.6) நடக்கிறது. எனவே, காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, மலையடி. பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, விளவங்கோடு, கழுவன் திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதி மற்றும் கிராம பகுதியிலும் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News December 4, 2025
குமரி: டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு

புதுக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. டிரைவரான இவர் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் முன் விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி அவரது கையில் அணிந்திருந்த ஐந்து பவுன் பிரைஸ் லெட், கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
குமரி: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

குமரி மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். <


