News April 12, 2025
தெப்பக்குளத்தில் மூழ்கி தவில் வித்வான் உயிரிழப்பு

பூதப்பாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (42). தவில் வித்வானான இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று மாலை பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தெப்பக்குளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
குமரி: ரூ.1000 வரலையா… மேல்முறையீடு செய்வது எப்படி!

குமரி மக்களே, ரூ.1000 வராதவங்க மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு வழிமுறை:
1<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
மேலும், தகவல்களுக்கு உங்கள் பகுதி கோட்டாட்சியரை தொடர்பு கொள்ளுங்கள்.
எல்லோருக்கும் இதை SHARE பண்ணுங்க..
News December 15, 2025
குமரி: கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது

சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்க்கும் ST மாங்காடு ஜான் செல்லதுரை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். டிச.13ல் இவர் வீட்டில் இருக்கும் போது வீட்டின் முன் அப்பகுதி ஜெபின் உட்பட 6 பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். செல்லதுரை அவர்களை திட்டி விரட்டவே அவர்கள் சேர்ந்து ஜான் செல்லத்துரையை தாக்கி மிரட்டியுள்ளனர். நித்திரவிளை போலீசார் ஜெபின் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஜான் செல்லதுரை GH-ல் அனுமதி.
News December 15, 2025
குமரி: கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது

சவுதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்க்கும் ST மாங்காடு ஜான் செல்லதுரை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். டிச.13ல் இவர் வீட்டில் இருக்கும் போது வீட்டின் முன் அப்பகுதி ஜெபின் உட்பட 6 பேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். செல்லதுரை அவர்களை திட்டி விரட்டவே அவர்கள் சேர்ந்து ஜான் செல்லத்துரையை தாக்கி மிரட்டியுள்ளனர். நித்திரவிளை போலீசார் ஜெபின் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஜான் செல்லதுரை GH-ல் அனுமதி.


