News March 25, 2025

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

image

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். 4-15 வயதுடைய மரங்களுக்கு தலா ரூ.2.25, 16-60 வயதுடைய மரங்களுக்கு தலா ரூ.3.50 செலுத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்துள்ளார்.

Similar News

News November 22, 2025

ஜெருசலேம் புனிதபயணத்துக்கு மானியம்

image

நவ.1 பிறகு ஜெருசலேம் புனிதபயணம் சென்று திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.37,000, 50 கன்னியாஸ்திரிகள்/ அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60,000 மானியமாக வழங்கப்பட உள்ளதால், தகுதியானவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம். 28-2-26க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை-க்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

News November 22, 2025

கோபி அருகே தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை!

image

கோபி அருகே வேட்டைகாரன்கோவில் கிழக்கு கரடு வீதியில் வசிக்கும் ஞானசேகரன் குடும்பத்தில், பிளஸ்-1 கணினி அறிவியல் மாணவர் குரு அஸ்வின் (16) நேற்று வீட்டில் தற்கொலை செய்தார். தேர்வில் மதிப்பெண் குறைவாகும் பயத்தில் அவர் மின்விசிறி கம்பியில் தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெரியவந்தவுடன் கோபி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 22, 2025

ஈரோட்டில் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் காந்தி, நேரு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி டிச.4, 5 ஆகிய தேதிகளில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, 2-வது பரிசாக ரூ.3,000, 3-வது பரிசாக ரூ.2,000 வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!