News March 26, 2025

தென்காசி Ex. MLA கருப்பசாமி பாண்டியன் காலமானார்

image

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் இன்று(மார்ச் 26) காலை உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் காலமானர். இவர் அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அதிமுக நிர்வாகிகள் உட்பட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் 1977-ல் அதிமுக சார்பில் ஆலங்குளம் & 2006-ல் திமுக சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 2, 2025

தென்காசியில் மாணவர் போக்சோவில் கைது

image

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவிக்கும், வி.கே. புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் ஏமாற்றி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவர் கர்ப்பமானதுடன் குறை பிரசவத்தில் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. புகாரின் பேரில் ஆலங்குளம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை போக்சோவில் கைது செய்தனர்.

News December 2, 2025

தென்காசி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

image

தென்காசி அருகே பாட்ட பத்து பாரதி தெருவை சேர்ந்தவர் பலவேசம் மனைவி மாரியம்மாள் நேற்று வடகரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்ற போது மாரியம்மாள் பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். தென்காசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குறித்து இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News December 2, 2025

தென்காசி பகுதியில் வருகிற டிச.06 மின்தடை

image

தென்காசி மாவட்டம், மின் பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: தென்காசி மாவட்டத்தில் வரும் டிச.06 சனிக்கிழமை அன்று செங்கோட்டை, தென்காசி, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி பகுதியில் 9 – 3 வரையிலும் செங்கோட்டை பகுதியில் 4 – 5 மணி, சுரண்டை பகுதியில் 6மணி சாம்பவர் வடகரை மதியம் 2 மணி வரை மின்தடை SHARE!

error: Content is protected !!