News March 26, 2025

தென்காசி Ex. MLA கருப்பசாமி பாண்டியன் காலமானார்

image

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் இன்று(மார்ச் 26) காலை உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் காலமானர். இவர் அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அதிமுக நிர்வாகிகள் உட்பட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் 1977-ல் அதிமுக சார்பில் ஆலங்குளம் & 2006-ல் திமுக சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 13, 2025

தென்காசி: டூவீலர் விபத்தில் பரிதாப பலி

image

புளியங்குடி வீரப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த மைதீன் (36) என்பவர் நேற்று இரவு புளியங்குடி – சிந்தாமணியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனது டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்து கொண்டிருந்த வேன் டூவீலரில் மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

News December 13, 2025

தென்காசி: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

image

தென்காசி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நாளை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்காலம். சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவர். நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் எல்லோரும் தெரிந்து கொள்ள உடனே SHARE பண்ணுங்க

News December 13, 2025

தென்காசி: வக்கீல் கொலையில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை

image

தென்காசியில் கடந்த 3ஆம் தேதி முத்துக்குமாரசாமி (46) என்ற வழக்கறிஞர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவசுப்பிரமணியனை (48) தேடி தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 4ம் தேதி நாமக்கல் ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். இதில் தற்கொலை செய்து கொண்டவர் சிவசுப்பிரமணியன் என தெரியவந்தது. அவரது உறவினா்கள் நேரில் உறுதிப்படுத்திய பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!