News October 25, 2024
தென்காசி வந்த குழுவினரை சந்தித்த முன்னாள் மா.செ

தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்களான மாவட்ட திமுக செயலாளர்கள் தஞ்சாவூர் சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தளி பிரகாஷ் எம்.எல்.ஏ மயிலை த.வேலு எம்.எல்.ஏ மற்றும் மு.பெ. கிரி எம்எல்ஏ ஆகியோர்களை இன்று (அக்.24) முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை வழங்கினார்.
Similar News
News October 17, 2025
முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்களை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஊரக வளர்ச்சி முகமை பழைய கட்டிடத்தில் இயங்கிவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 17.11.2025க்குள் அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
தென்காசி பயணிகளுக்கு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு

தென்காசி மாவட்ட பயணிகளுக்கு தீபாவளி விடுமுறைக்காக தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு சிறப்பு ரயில் வண்டி எண் 06013. தாம்பரம் இருந்து 17.10.25 (வெள்ளி) இரவு 7:30 புறப்படும். சங்கரன்கோவில் வருகை அதிகாலை 4.40 மணிக்கு வந்துசேரும். செங்கோட்டை – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு வண்டி எண் 06014 சங்கரன்கோவில் இருந்து 20.10.25 (திங்கள்) இரவு 9:30 புறப்படும். தாம்பரம் வருகை காலை 9.45 மணிக்கு வந்துசேரும்.
News October 16, 2025
சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து 2 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் ராமர் (37) மற்றும் முருகையா (66) ஆகியோர் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, வன்னிக்கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.