News March 28, 2025
தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (மார்ச்-27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 18, 2025
தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 18, 2025
தென்காசி: சிசிடிவி பொருத்துதல், பழுது நீக்குதல் பயிற்சி வகுப்பு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர் பழைய எஸ்பி ஆபிஸ் அருகில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் டிசம்பர் 22ம் தேதி முதல் 30 நாட்களுக்கு சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் வகுப்புகள் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 8825794607 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். SHARE!
News December 18, 2025
தென்காசி: விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த ராஜ் ( 38). கூலி தொழிலாளியான இவர் ஆலங்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் பஸ் நிலையம் எதிரே சாலையை கடக்கும்போது ஒரு கார் எதிர்பாராத விதமாக ஆனந்தராஜ் மீது மோதியது. இதில் இவர் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுனரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.


