News April 25, 2025
தென்காசி மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஆட்கொல்லி தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின் கீழ் இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் 28.04.2025 முதல் 27.05.2025 வரை நடைபெறவுள்ளது. எனவே ஆடுகள் வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எவ்வித பாகுபாடின்றி தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
தென்காசி மாவட்டத்தில் நாளை எழுத்து தேர்வு

2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் நேரடி சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தென்காசி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் நாளை 21.12.2025 நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 3,335 மற்றும் பெண்கள் 1,156 என மொத்தம் 4,491 விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தேர்வு பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்,
News December 20, 2025
தென்காசி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்தவர் ராஜ நயினார் (28). இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பாப்பாகுடி இன்ஸ்பெக்டர் பரத் லிங்கம் வேண்டுகோளின் படி எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையை அடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி ராஜ நயினார் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News December 20, 2025
தென்காசி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

தென்காசி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் <


