News March 4, 2025

தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

image

அய்யா வைகுண்டரின் 193வது அவதார திருநாளை முன்னிட்டு இன்று(மார்ச் 4) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே.கமல் கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 5, 2025

தென்காசியில் கால அவகாசத்தை நீட்டித்து ஆட்சியர் உத்தரவு.!

image

தென்காசி மாவட்டத்தில், உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

செண்பகாதேவி அம்மனை வழிபாடு செய்ய அனுமதி

image

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை வழிபாடு செய்வதற்கான பௌர்ணமி கிரிவலம் பாதை இன்று(நவ.04) அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரிவல நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். நாளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News November 5, 2025

சிறை காவலர் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு

image

2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 09.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை மணி 10.00 முதல் 12.40 மணி வரை (Main Written Examination) & (Tamil Language Eligibility Test) வைத்து நடைபெற உள்ளது. மாவட்ட எஸ்பி அரவிந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!