News May 17, 2024
தென்காசி: மழைக்கு வாய்ப்பு!

தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தென்காசியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 14, 2025
சங்கரன்கோவிலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர் (36). இவரது 1½ வயது ஆண் குழந்தை தீரன் நேற்று முன்தினம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தான். குழந்தையை உடனைடியாக குடும்பத்தார் மீட்டு சங்கரன்கோவில் G.H-லும், மேல் சிகிச்சைக்காக பாளை G.H-க்கும் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை தீரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் விசாரணை.
News December 14, 2025
தென்காசி: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

தென்காசி மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 14, 2025
தென்காசி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் சந்தை தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர், குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


