News November 23, 2024

தென்காசி பெண் குழந்தைகள் பெற்றோர் கவனத்திற்கு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வீர தீர செயல்கள் புரிந்த 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம். 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட, தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைவீர தீர செயல்கள் புரிந்திருக்க வேண்டும். மற்றும் சமுதாய பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 5, 2025

தென்காசி: 10th போதும்.. அரசு வேலை., மீண்டும் வாய்ப்பு

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14,967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச.4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச.11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

News December 5, 2025

தென்காசி: மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி

image

கடையம் அருகே முதலியார்பட்டியை சேர்ந்த சுடலை மகன் சர்வேஷ் (3). நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக அங்கிருந்த மின்மோட்டார் ரூமுக்கு சென்ற மின் கம்பியை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடையம் போலீஸார் சிறுவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 5, 2025

தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.5) தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!