News January 1, 2025

தென்காசி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா பரிசளிப்பு விழா

image

தென்காசி மாவட்டம், பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், சார்பில் இன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு வெள்ளி விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

Similar News

News December 12, 2025

தென்காசி : மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

image

சுரண்டை அருகே சாம்பவர்வடகரையை சேர்ந்தவர் உமா (31) இவரது கணவர் கோவிந்தராஜ் வெளியில் கடன் வாங்கிவிட்டு பிரிந்து சென்றார். இவருக்கு தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். கடன் தொல்லையால் இவர் சில தினங்கள் முன்பு தன் மகனுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உமா உயிரிழந்துளளார். இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசார் விசாரணை.

News December 12, 2025

தென்காசி: SIR-ல் பெயர் இருக்கா? இல்லையா? CHECK பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, நீங்கள் நிரப்பி கொடுத்த SIR படிவத்தில் 2026 வாக்காளர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை உங்க போனில் பார்க்க வழி உள்ளது.
1.<>இங்கு க்ளிக்<<>> செய்து LOGIN பண்ணுங்க.
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்யுங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையென்றால் உங்கள் BLO அதிகாரியை தொடர்புகொள்ளுங்க. SHARE பண்ணுங்க

News December 12, 2025

தென்காசி: பஸ் மோதி விவசாயி பலி

image

புளியங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி முருகையா (60). இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் ஊருக்கு திரும்பி வருகையில், சங்கரன்கோவில் ரோட்டில் எதிரே வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை GH-ல் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!