News January 1, 2025

தென்காசி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா பரிசளிப்பு விழா

image

தென்காசி மாவட்டம், பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், சார்பில் இன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு வெள்ளி விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

Similar News

News November 20, 2025

தென்காசி: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ. 21) நடைபெற உள்ளது. 8th, முதல் ஏதவது ஒரு டிகிரி, ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு சம்பளம் ரூ.25,000 வரை வழங்கப்படும். கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் <>www.tnprivatejobs.tn.gov.in<<>> என்ற வலைதளத்தில் Candidate Login –ல் பதிவு செய்ய வேண்டும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 20, 2025

செங்கோட்டை விரைவு ரயில்: வழித்தடங்களில் மாற்றம்

image

திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 20, 21, 22, 23, 24, 25 ஆம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

News November 20, 2025

தென்காசி: போக்சோ கைதி சிறையில் தற்கொலை

image

தென்காசி மாவட்டம் ஆயக்குடியைச் சேர்ந்தவர் திருமலை குமார் (39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிறை குளியல் அறையில் தான் அணிந்திருந்த விலங்கில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!