News March 27, 2025

தென்காசி: திருமண தோஷம் நீக்கும் ஆலயம்

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நீல மணி நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற கோலத்தில் இங்கு காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்கிறார்கள். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர் செய்யவும்*

Similar News

News November 14, 2025

தென்காசி: யானைகளை கட்டுப்படுத்த குழு

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வெளியேறும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த யானை தோழர்கள் என்ற குழு உருவாக்கப்படுகிறது ஒவ்வொரு வன சரகத்தில் அதிகபட்சமாக நாலு நபர்கள் கொண்ட யானை தோழர்கள் குழு அமைக்கப்படும் குழு உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வனக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்று வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

புதிதாக பொறுப்பேற்றுள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்!

image

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக கருப்பண்ண ராஜவேல் பொறுப்பேற்பு தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் இருந்த எடிசன் மாற்றப்பட்ட நிலையில் ஏற்கனவே செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் இருந்த கருப்பண்ண ராஜவேல் நவம்பர்-14ஆம் தேதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News November 14, 2025

தென்காசி: கிராம உதவியாளர் தேர்வு ஒத்திவைப்பு

image

தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி செங்கோட்டை ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய ஆறு வட்டங்களில் 18-11-2025 அன்று காலை 10.00 மணி முதல் 30 மணி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து 17.11.2025 முதல் 27.11.2025 வரை நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ஆகிய அனைத்தும் நிருவாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!