News March 27, 2025
தென்காசி: திருமண தோஷம் நீக்கும் ஆலயம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நீல மணி நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற கோலத்தில் இங்கு காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்கிறார்கள். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர் செய்யவும்*
Similar News
News October 15, 2025
தென்காசி: வனச்சரகம் தொடர்பாக எண்கள் அறிவிப்பு

தென்காசி வனச்சரகம் தென்காசி வனக்கோட்டம் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து குடிப்பது மது அருந்துவது புகைப்பிடிப்பது நெருப்பு மூட்டுவது குப்பைகளை போடுவது வேட்டையாடுவது வேட்டையாட முயற்சிப்பது வனச் சட்டத்தின் படி குற்றமாகும்மேலும் விவரங்களுக்கு தென்காசி வனச்சரக அலுவலரின் கைபேசி எண்ணிற்கு 9786932520 தொடர்பு கொள்ளலாம். அலுவலகம் 04633 233660 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு

தென்காசி மாவட்ட மக்களே வருகின்ற 20/10/2025 தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேர ஒதுக்கீடு குறித்த அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி தினத்தன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும் மற்றும் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு விடுத்துள்ளது.
News October 14, 2025
வீர தீர சாதனைகள் விருது: பதிவு செய்ய அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் 13 வயதிற்குமேல் 18 வயதுக்குள் வீரதீர சாதனைகள் புரிந்த பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்படவுள்ளது. எனவே பெண் குழந்தைகள் தாங்கள் புரிந்த வீரதீர சாதனைகள் குறித்த விபரங்கள் அதற்கான ஆதாரங்களுடன் அக். 20ம் தேதி முதல் 29க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in பதிவேற்ற ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்.