News March 27, 2025
தென்காசி: திருமண தோஷம் நீக்கும் ஆலயம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நீல மணி நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற கோலத்தில் இங்கு காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்கிறார்கள். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர் செய்யவும்*
Similar News
News January 3, 2026
தென்காசி: பெண் படுகொலை… ஒருவர் கைது

சேர்ந்தமரம் பகுதி அரியநாயகிபுரத்தை சேர்ந்த முருகசெல்வி நேற்று (ஜனவரி 2) தனது வீட்டின் வெளியே உள்ள குளியலறையில் இறந்த நிலையில் கிடப்பபதாகவும், அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி சங்கிலியை காணவில்லை என அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் கொலையில் ஈடுபட்ட வடநத்தம்பட்டியை சேர்ந்த சரத் என்பவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
News January 3, 2026
தென்காசி வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

தென்காசி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News January 3, 2026
தென்காசி: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572?

தென்காசி மக்களே, ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


