News March 27, 2025

தென்காசி: திருமண தோஷம் நீக்கும் ஆலயம்

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நீல மணி நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற கோலத்தில் இங்கு காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்கிறார்கள். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர் செய்யவும்*

Similar News

News December 19, 2025

தென்காசி: மூட்டை மூட்டையாக புகையிலை கடத்தல்.. கைது

image

பாவூர்சத்திரம் – மேலப்பாவூா் சாலையில் உதவி ஆய்வாளர் ராஜேஸ் குமாா் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அடங்கிய மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருள்கள், பயணிகள் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், க.சோ்மன் (46), த.சிவன்பாண்டி (43) ஆகியோரை கைது செய்தனா்.

News December 19, 2025

தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

image

மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றால் விவசாய அடையாள எண் கண்டிப்பாக தேவை. மேலும், 22வது பிரதம மந்திரி கெளரவ தொகை பெறுவதற்கும், பயிர் காப்பீட்டுத்தொகை பெறுவதற்கும் விவசாய அடையாள எண் தேவை.இதற்கு விண்ணப்பிக்க விவசாயிகள், வட்டார வேளாண்மை/தோட்டக்கலை அலுவலகங்களுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களோடு சென்று டிச.28க்குள் விவசாய அடையாள எண் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

News December 19, 2025

தென்காசி: கொத்தடிமை தொழிலாளர் கண்டறிந்தால் சிறை

image

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் வேலை அளிப்பவர்களுக்கு ரூபாய் 50,000 அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடத்தி தொழிலாளர்கள் முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.

error: Content is protected !!