News March 27, 2025

தென்காசி: திருமண தோஷம் நீக்கும் ஆலயம்

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நீல மணி நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற கோலத்தில் இங்கு காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்கிறார்கள். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர் செய்யவும்*

Similar News

News October 10, 2025

கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க அழைப்பு ஆட்சியர் தகவல்

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பி.வ. மி.பி.வ. மற்றும் சீ.ம. மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தகவல் அளித்துள்ளார்.

News October 9, 2025

தென்காசியில் நாளை புகையிலை ஒழிப்பு பேரணி

image

தென்காசி நகராட்சிக்குட்பட்ட ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து அக்டோபர் 10 நாளை காலை 10 மணி அளவில் பொது சுகாதார துறையின் மூலம் தேசிய புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

News October 9, 2025

தென்காசி: வேலை நாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்.17ல் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Employer Loginல் நிறுவனம் தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். வேலைநாடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!