News March 27, 2025
தென்காசி: திருமண தோஷம் நீக்கும் ஆலயம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நீல மணி நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற கோலத்தில் இங்கு காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்கிறார்கள். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர் செய்யவும்*
Similar News
News November 11, 2025
சங்கரன்கோவில் வழி சபரிமலை செல்லும் சிறப்பு ரயில் அறிவிப்பு

தென்னக ரயில்வேயின் நான்டேட் – கொல்லம் – நான்டேட் சிறப்பு ரயில் வண்டி எண் 07111/07112 – 20.11.25 – 15.01.26 வரை ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் ஹைதராபாத்தில் இருந்து புறப்படும். 22.11.25 – 17.01.26 வரை ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கொல்லும் ஜங்ஷன் இருந்து புறப்படும். வழி: மராட்டிய மாநிலம் நான்டேட், கச்சிகுடா, வேலூர், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சங்கரன்கோவில் வழியாக கொல்லம் வரை செல்லும்.
News November 11, 2025
கரிவலம்வந்தநல்லூர் கோவில் வளாகத்தில் வணிக வளாகம் கட்ட தடை

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பால்வண்ணநாதர் ஒப்பனை அம்மன் திருக்கோவிலில் சுற்றியுள்ள பகுதிகளில் வணிக வளாகம் கட்டப்படுவதை கண்டித்து பல அமைப்புகள் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் கிளை மதுரை பெஞ்சில் தீர்ப்பின் படி கோவில் வளாகத்தில் கட்டப்படும் வணிக வளாகத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
கடையநல்லூர் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பணிகள் காரணமாக கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துசாமிபுரம், கருப்பா நதி, தாா்க்காடு, போக நல்லூர், கண்மணியாபுரம் பகுதிகளில் நவம்பர் 12ஆம் தேதி 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் சீரான மின் விநியோகம் வழங்கப்படும்.


