News March 27, 2025
தென்காசி: திருமண தோஷம் நீக்கும் ஆலயம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நீல மணி நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற கோலத்தில் இங்கு காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்கிறார்கள். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர் செய்யவும்*
Similar News
News November 9, 2025
தென்காசி: நாளை காய்கறி சந்தை விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் பெரிய சந்தைகளில் ஒன்று புளியங்குடி காய்கறிச் சந்தை. ஒவ்வொரு மாதமும் தமிழ் மாத கடைசி திங்கட்கிழமை மாதாந்திர விடுமுறை விடப்படும். அந்த வகையில் நாளை (நவ.10) திங்கள்கிழமை மாதாந்திர விடுமுறை அறிவிக்கபட்டுள்ளதால் நாளை புளியங்குடியில் காய்கறி சந்தை இயங்காது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 9, 2025
ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் சுகாதார கேடு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேருந்து நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்திற்கு உள்ள நீண்ட நாள்களாக கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிவு நீரை அகற்ற பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 9, 2025
தென்காசி : 12th PASS – ஆ…? அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: தமிழக அரசு
2. காலியிடங்கள்: 1429
3. கல்வித் தகுதி: 12th, + 2 ஆண்டு சுகாதார பணியாளர் படிப்பு சான்றிதழ்
4.சம்பளம்.ரூ.ரூ.19,500 – ரூ.71,900
5. கடைசி நாள்: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


