News March 27, 2025

தென்காசி: திருமண தோஷம் நீக்கும் ஆலயம்

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நீல மணி நாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற கோலத்தில் இங்கு காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்கிறார்கள். திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். *ஷேர் செய்யவும்*

Similar News

News October 13, 2025

தென்காசி ரயில் பயணிகளுக்கு தீபாவளி குறித்த அறிவிப்பு

image

தீபாராதனை பண்டிகை வருகிற அக்டோபர் -20 ஆம் தேதியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தும் போது, ரயிலில் பட்டாசுகள் உள்ளிட்ட வெடி பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. அப்படி எடுத்து சென்றால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

News October 13, 2025

தென்காசி: கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழப்பு

image

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகே கீழஅழகு நாச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த சீனி பாண்டியன் என்பவர் இன்று காலையில் கிணற்று அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News October 13, 2025

தென்காசி: ரயில்வே-ல சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க!

image

இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5.கடைசி தேதி: 14.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE .<<>>
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!