News November 23, 2024

தென்காசி காவல்துறை உதவி எண் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 6, 2025

டிச.13ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 13.12.2025 அன்று புளியங்குடி S.வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து கல்வி தகுதிகள் கொண்ட 10000-க்கும் மேற்பட்ட பணிகள் உள்ளன. கூகுள் படிவம்: https://forms.gle/5Kzi9zpDTa7Mi9jc6

News December 6, 2025

தென்காசி: என் சாவுக்கு காரணம்., இளம்பெண் கடிதம்!

image

சிவகிரியை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி பொன் ஆனந்தி (26). கடையநல்லூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பொன் ஆனந்தி, ஆன்லைன் விளையாட்டில் ரூ.63 ஆயிரம் இழந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘ என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ என அவர் கடிதம் எழுதியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News December 6, 2025

தென்காசி: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. கடைசி நாள்!

image

தென்காசி மாவட்டத்தில் நடப்பு பிசானம் பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர டிசம்பர் 16ம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நெல் பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.540/- பிரிமியம் செலுத்த வேண்டும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து பிரிமியம் செலுத்திட மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார். SHARE

error: Content is protected !!