News April 2, 2025

தென்காசி: கட்சி கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடி கம்பங்கள் சமூகம் மதம் சங்கம் சம்பந்தமான கொடி கம்பங்களை 20/05/25-க்குள் தாங்களாகவே அகற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவ்வாறு தவறும் பட்சத்தில் அரசு முன்வந்து கொடி கம்பங்களை அகற்றும் எனவும்,  அதற்கான தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 11, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஏப்ரல்-10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2025

புவிசார் குறியீடு பெற்ற புளியங்குடி எலுமிச்சை

image

தமிழ்நாட்டில் மிகப்பெரிய எலுமிச்சைச்சந்தை புளியங்குடியில் தான் அமைந்துள்ளது. இங்கு தினமும் சராசரியாக 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் எலுமிச்சை ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். அதனால் இதற்கு லெமன்சிட்டி என்று பெயருண்டு. தற்போது புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார்குறியீடு வழங்கியுள்ளது. இதன்மூலம் புளியங்குடியில் கிடைக்கும் எலுமிச்சை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி. *ஷேர் 

News April 10, 2025

தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை

image

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு நாளை (ஏப்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஏப்.26 சனிக்கிழமை அன்று வேலைநாள் என கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார். அதேபோல், பங்குனி உத்திரம், காசி விஸ்வநாதர் கோயில் திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றமின்றி நடைபெறும்.

error: Content is protected !!