News April 1, 2025
தென்காசி: கடன் தொல்லை தீர்க்கும் கோயில்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மலை உச்சியில் ஒக்க நின்றான் பொத்தையில் ராமர் சீதாதேவி அருள்பாலிகின்றனர். சீதாதேவியை தேடி, ராமன் ஒற்றை காலில் நின்று சீதையைத் தேடி நின்ற பகுதிதான் ஒக்க நின்றான் பொத்தை என்று அழைக்கப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சிறப்பான தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. *கடன் தொல்லையில் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணவும்*
Similar News
News November 5, 2025
சிறை காவலர் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு

2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 09.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை மணி 10.00 முதல் 12.40 மணி வரை (Main Written Examination) & (Tamil Language Eligibility Test) வைத்து நடைபெற உள்ளது. மாவட்ட எஸ்பி அரவிந்த் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

தென்காசி நகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு வரும் நவம்பர் 13 அன்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு 14ஆம் தேதியும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என பரிசு வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்தார்.
News November 5, 2025
இலவச தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம் மூலம் இலவச தையல் பயிற்சி நிறைவு செய்த ஆலங்குளம் மற்றும் கடையநல்லூர் வட்டாரத்திலுள்ள 60 பெண்களுக்கு 45 நாட்கள் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு இன்று (04.11.2025) சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.


